districts

img

மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை திடீர் ஆய்வு கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் - அபராதம்

உதகை, ஏப். 6- ஊட்டியில் பழைய மற்றும் கெட்டு போன மீன்களை நீண்ட காலம் இருப்பு  வைத்து விற்கப்படுவதாக எழுந்த புகா ரின் அடிப்படையில், உணவு பாதுகாப் புத்துறையினர் திடீர் சோதனை மேற் கொண்டு பழைய மீன்களை பறிமுதல்  செய்து அழித்தனர். உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட  நியமன அலுவலர் சுரேஷ், மீன்வளத் துறை உதவி இயக்குநர் ஜோதி லட்சும ணன் தலைமையில் வியாழனன்று  ஊட்டி நகராட்சி மார்க்கெட், மெயின் பஜார், சேரிங்கிராஸ், ரயில் நிலையம் அருகே  உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார்  15க்கும் மேற்பட்ட உள்ள மீன் கடை களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் தரமற்ற மற்றும் நீண்ட  நாட்களான பழைய கெட்டு போன  மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட் டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுமார் 50 கிலோ கெட்டு போன மீன்களை  பறிமுதல் செய்து அதில் பினாயில் ஊற்றி அழித்தனர். கெட்டு போன மீன் களை வைத்திருந்தது மற்றும் சுகாதா ரமற்று இருந்த 4 கடைகளுக்கு நோட் டீஸ் வழங்கப்பட்டு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது.

 இதுகுறித்து, மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜோதி லட்சுமணன் கூறுகையில், பொதுமக்களுக்கு தர மான மீன்கள் விற்பனை செய்யப் படுகிறதா என ஊட்டி மார்க்கெட், சேரிங் கிராஸ், மெயின் பஜார் உள்ளிட்ட பகுதி களில் உள்ள மீன் கடைகளில் ஆய்வு  செய்யப்பட்டது. இதில் சில கடைக ளில் தரம் குறைந்த மற்றும் கெட்டு  போன மீன்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து அழிக்கப்பட் டது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை கடலோர மாவட்டம் இல்லை. வெ ளியூர்களில் இருந்து தான் மீன் இங்கு  கொண்டு வரப்படுகிறது. கடலில் பிடித்து அவற்றை கரைக்கு கொண்டு வந்து, அதன் பின் விற்பனைக்கு அனுப்பும் போது இங்கு வந்து சேர 4 முதல் 5 நாட் கள் வரை ஆகும்.  இந்த இடைப்பட்ட காலத்தில் மீன் கள் அழுக அதிக வாய்ப்புகள் உள்ளன.  எனவே பொதுமக்கள் மீன்களை சரிபார்த்து நல்ல மீன்களை மட்டுமே வாங்க வேண் டும். கெட்டு போகாமல் இருக்க பார்ம லின் என்ற ரசாயனத்தை பயன்ப டுத்த கூடாது. வியாபாரிகள் பொதுமக் களுக்கு நல்ல தரமான மீன்களை மட்டுமே விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தப் பட்டது. என்றார். இந்த ஆய்வின் போது  ஊட்டி வட்டாட்சியர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் பலர் உடனி ருந்தனர்.