districts

img

ஒடசல்பட்டி கூட்டு சாலையில் மேம்பாலம்: மக்கள் கோரிக்கை

தருமபுரி, பிப்.20- தருமபுரியில் இருந்து அரூர்  பகு திக்கு புதிதாக அமைக்கப்படும் நான்கு  வழிப்பாதையில் ஒடசல்பட்டி கூட்டு  ரோடு பகுதியில் உயர் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரியில் இருந்து அரூர், திரு வண்ணாமலை வரை தினமும் ஆயிரக் கணக்கான வாகனங்கள்  செல்வதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக் கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. இதனையடுத்து, தற்போது நான்கு வழி பாதையாக அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அதன்படி, தருமபுரியில் இருந்து ஒடசல் பட்டி கூட்டுரோடு, மொரப்பூர், அரூர், தீர்த்தமலை, தானிப்பாடி, வழியாக திரு வண்ணாமலை வரை 113 கிலோமீட்டர்  தூரம் புதிய நான்கு வழிச்சாலை அமைக் கப்படுகிறது. இதற்கு 410 கோடி மதிப்பு மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, ரூ.313.50 கோடி மதிப்பில்  தருமபுரி - அரூர் இரு வழிப்பாதையில் இருந்து 4 வழி பாதையாக மாற்றப்படு கின்றது. தற்போது ஏழு மீட்டர் அகலம் கொண்ட நெடுந் சாலை நான்கு வழிச் சாலையின் போது 16.20 மீட்டர் அகலம் கொண்ட நான்கு வழியாக மாற்றப்படு கிறது. இச்சாலை அமைப்பதால் வாகன நெரிசல் குறைந்து, விபத்து இல்லாமல்  பயண தூரத்தை கடக்க முடியும் என்ப தால் சாலை பணிகள் நடைபெற்று வரு கிறது. சாலையின் பாதுகாப்பு கருதி மையப்பகுதியில் தடுப்பு சுவர் 1.20 மீட் டர் அகலம் அமைக்கப்படுகிறது, சாலை விபத்தை தடுக்க 52 இடங்களில் சாலை  சந்திப்பு மேம்பாடு செய்தல், 36 இடங் களில் பேருந்துகள் நின்று செல்வதற் கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. '

தரும புரியில் இருந்து அரூர் வரை செல்லும் இந்த நான்கு வழி பாதையில் 99 சிறு பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தருமபுரி மாவட்டத் தில் முக்கிய பகுதிகளாகவும் பெரிய பேரூராட்சிகளாகவும் இருந்து வரும்  கடத்தூர், பொ.மல்லாபுரம் என்கின்ற பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி என  மூன்று பெரிய பேரூராட்சிகளையும் 500க்கும் மேற்பட்ட கிராம பகுதி மக்க ளும் அன்றாட பணி மற்றும் பள்ளி, கல்லூரிக்கு 100க்கும் மேற்பட்ட வாகனங் கள் மாவட்ட நிர்வாக அலுவலகம் செல் லக்கூடிய மக்கள்  தருமபுரியிலிருந்து வரும்போது ஒடசல் பட்டியில் பிரிவு சாலையாக உள்ளது.  இந்த இடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஜங்ஷனாக உள்ளது. இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகன ஓட்டிகளின் சிர மத்தை தவிர்க்கவும், விபத்து இல்லா மல் இருக்கவும் இந்தப் பகுதியில் உயர் பாலம் அமைக்க வேண்டும் என பாப்பி ரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் பகுதி வாகன ஓட்டிகளும் பொதுமக்க ளும் வலியுறுத்தியுள்ளனர்.  தற்போது இந்த பகுதியில் பேருந்து நிறுத்தத்திற்கு மட்டுமே சாலை விரி வாக்கும் பணி நடப்பதாலும், நான்கு வழிச்சாலையைக் அமைத்த பிறகு வாக னங்கள் கடக்கும் போது விபத்துக்கள் ஏற்படலாம் என்பதால் முன்கூட்டியே இப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் அமைக்க வேண்டும் என  மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அர சையும் இப்பகுதி மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.