பொள்ளாச்சி, மே. 21- தொடர் மழை காரணமாக கோவை மாவட் டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை அருகே உள்ள கவியருவியில் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத் தில் பரவலாக மழை பெய்து வருகிறது மேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலை வன பகுதி களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகி றது. இந்நிலையில், செவ்வாயன்று பெய்த கனமழையில் ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ள கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் பொதுமக்கள் கவியருவிக்கு செல்ல வனத் துறை தடை விதித்தது. கடந்த மூன்று மாதங் களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், கவியருவில் தண்ணீரின்றி வெறும் பாறை களாக காட்சியளித்தது. இதனையடுத்து, வறட்சியின் காரணமாக கவியருவிக்கு சுற் றுலாப் பயணிகள் யாரும் வரவில்லை. இந்நி லையில், கோடை மழை வெளுத்து வாங்கு வதால், தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. இதேபோன்று, கோவை குற்றாலத்தில் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டு கிறது.