ஈரோடு, மேட்டுக்கடை பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் உடைந்து கூரபாளையம், மூலக்கரை பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனை பார்வையிட வந்த, தமிழக வீட்டு வசதி மற் றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் என்.பால சுப்பிரமணி தலைமையில் மனு அளித்தனர்.