districts

img

கொடி காத்த குமரன் பிறந்தநாள் விழா

ஈரோடு, நவ.1- ஈரோடு மாவட்டம், சிவகிரியில் சுதந்திர போராட்ட தியாகி கொடி காத்த குமரனின் 120 வது பிறந்தநாள் விழா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தியாகி குமரன் பேரவை சார்பாக சிவகிரியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு தியாகி குமரன் பேரவை தலைவர் சசி தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் லோகநாதன் வரவேற்றார். மேலும், சிவகிரி வட்டார பகுதியின்  எழுத்தாளர் மதன் ராமலிங்கத்தின்  தொலாக்கெணறு எனும்  சிறுகதை தொகுப்பை தமுஎகச விக்னேஷ் அறிமுகப்படுத்தி னார். விழாவில் தியாகி குமரன் பேரவை மற்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர்.