districts

img

உயிர்பலி கேட்கும் மீன்கரை சாலை

பொள்ளாச்சி, ஜன.25-  பொள்ளாச்சி மீன்கரை சாலையில் உயிரை பறிக்கும் அளவில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சீர மைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி - மீன்கரை சாலை யில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பய ணிக்கின்றன. அண்டை மாநிலமான கேரளாவிற்கு செல்ல  மிக அத்தியாவசியமான சாலையாக இந்த சாலை அமைந் துள்ளது. இவ்வழியே ஆனைமலை, அம்பராம்பாளையம், சேத்துமடை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல 50க்கும் மேற் பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள் இயக்கப் படுகின்றன. இதைத்தவிர ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களும் அதிகளவில் வந்து செல்கின்றன. இச்சூழலில், இச்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமடைந்துள்ளனர். எனவே, பொது மக்களின் நலன் கருதி உடனடியாக இந்த பள்ளத்தை சரி செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.