districts

மின்துறையின் அலட்சியம்: தருமபுரி மாவட்டத்தில் கரும்பு தோட்டத்தில் தொடரும் தீ விபத்துகள்

தருமபுரி, மார்ச் 19- தருமபுரி மாவட்டத்தில் மின்சாரத் துறையின் அலட்சியத்தால் ஏற்படும் தொடர் விபத்துகளால் கரும்பு தோட் டங்கள் தீக்கிரையாகி வருவதாக விவ சாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் மற்றும் பராமரிப்பு இல்லாத மின்மாற்றிகளால் தொடர் மின்விபத் துக்கள் ஏற்படுகிறது. மேலும், பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது  மின்சாரம்  செல்லும் வயர்கள் உரசுவ தால் ஏற்படும் மின் விபத்துகளால் கரும்பு தோட்டம் எரிந்து, சேதமடை யும் நிகழ்வுகள் தொடர்வதால் பாதிக் கப்பட்ட விவசாயிகள் பெரும் சிரமத் திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கி டையே கடத்தூர் அருகே உள்ள வெ. புதூர் பகுதியில் கடந்த வாரம் இரண்டு ஏக்கர் கரும்பு தோட்டங்கள் எரிந்து சேதமானது. இதைத்தொடர்ந்து, ஜாலி யூர், ரேகடஅல்லி பகுதியில் கரும்பு தோட்டங்கள் தீக்கிரையாகின. தற் போது, கடத்தூரை அடுத்த கேத்து ரெட்டிப்பட்டி அருகே உள்ள செங்கா நகர் பகுதியில் மின் விபத்தினால் கரும்பு தோட்டம் சேதமடைந்தில், பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித் துள்ளனர். இந்நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற் படும் தீ விபத்துகள், மின்சாரத்துறை யின் அலட்சியத்தால் தான் தொடர்ந்து ஏற் பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். வறட்சியான காலத் தில் தொடர்ந்து மின்விபத்துக்கள் ஏற் படாத வகையில், மின்வாரிய அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்க ளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.