districts

img

சென்னிமலை வனப்பகுதியில் தீ

ஈரோடு, பிப்.7- ஈரோட்டில் உள்ள சென்னிமலை வனப்பகுதியில் ஏற் பட்ட தீ விபத்தில் 5 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி தீயில் கருகின. ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை வனப்பகுதி யானது 1300 ஏக்கர் பரப்பளவு உடையது. இங்கு காய்ந்த  செடி, கொடிகள் ஏராளமாக உள்ளன. இப்பகுதியில் திடீ ரென தீப்பிடித்து மளமளவென வனம் முழுவதும் பரவியது. உடனே அருகில் உள்ள பொதுமக்கள் சென்னிமலை தீய ணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதை யடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று,  தீ பரவாமல் தடுத்தனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு தீயில் கருகின. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.