districts

img

பவானிசாகர் நீர்தேக்க பகுதியில் குட்டி யானையின் உடல் கண்டெடுப்பு

மேட்டுப்பாளையம், மார்ச் 30- பவானிசாகர் நீர்தேக்க பகுதியில் கிடந்த குட்டி யானை யின் உடலை வனத்துறையினர் மீட்டு விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சரகம், பெத்திக் குட்டை மயில்மொக்கை வனப்பகுதி மற்றும் பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது, பவானிசாகர் நீர்தேக்க பகுதியில் குட்டியானை ஒன்று இறந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வன மருத்துவர்களை வரவழைத்து யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப் பட்டது. இதில், இறந்து கிடந்தது 6 வயது மதிக்கத்தக்க பெண்  குட்டியானை என்பதும், கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட தால் உயிரிழந்ததும் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.