தருமபுரி, ஜூன் 23- மின்வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விபத்தில்லா மின்வாரியம் அமைக்க வேண்டும். மின் ஊழியர் களின் உயிர் காக்க வேண்டும். மின் வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஆட்குறைப்பு முறையை கைவிட வேண்டும். வாரிய ஆணை எண். 2-ஐ ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர் களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்யவேண்டும். கேங்மேன், வாரிசு வேலைக்கு சேர்ந்த மின் ஊழியர்கள் அனைவ ருக்கும் கடந்த காலத்தைபோன்று ஊதிய உயர்வு வழங்கவேண்டும். அடையாளம் காணப்பட்டு நிரந்தர பணி ஆணை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பகுதி நேர தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந் தரப்பணி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் வி.வெண்ணிலா தலைமை ஏற்றார். இதில், மாநில துணைத்தலைவர் பி.ஜீவா, மாவட்ட செயலாளர் தீ.லெனின் மகேந்திரன், மாவட்ட பொரு ளாளர் வி.சீனிவாசன் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து உரையாற் றினர்.
ஓய்வுபெற்றோர் மின்ஊழியர் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஜி.பி.விஜயன் வாழ்த்தி பேசினார். முடிவில், மாநில செயற்குழு உறுப் பினர் எஸ்.விஜியன் நன்றி கூறி னார். சேலம் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் சேலம் மேற் பார்வை பொறியாளர் அலுவலகம், மேட்டூர் அனல் மின் நிலையம், சுரங்க மின் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சேலம் மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு சேலம் வட்டக்கிளை தலைவர் கருப் பண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செயலாளர் ரகுபதி, பொரு ளாளர் பழனிசாமி, கட்டுமான வட்ட செயலாளர் வெங்கடேசன், ஆகியோர் பங்கேற்றனர். மேலும் மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வி.இளங்கோ, ஜான்சன், பி.கே.சிவகுமார் ஆகி யோர் சுரங்க மின் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான மின் ஊழியர்கள் பங்கேற் றனர்.