districts

img

காவிரி உபரிநீரை ஏரிகளில் நிரப்பிடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடைபயணம்

தருமபுரி மாவட்டம் உதயமாகி 58 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், பொருளாதாரத்திலும், மனிதவள மேம்பாட்டிலும் பின்தங்கியே உள்ளது.  தொழிற்சாலையில்லாத இம் மாவட்டத்தில் 80 சதவிகிதம் விவசா யமும், விவசாயம் சார்ந்த தொழில் களாகும். தொடர் வறட்சியால் ஏரி,  குளம், குட்டை ஆகிய நீர் நிலைகள் வறண்டு உள்ளதால் விவசாயம் பொய்த்துபோய் உள்ளது.  இங்கு  சராசரி மழை அளவில் பாதி கூட பெய்வதில்லை. இதனால்,  பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் 1200 அடிக்கும் கீழ் சென்று விட்டது. பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், அரூர் ஆகிய வட்டங் களில் ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து தண்ணீர்  எடுக்க  தடை   விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவ சாயம் செய்யப்படும் பரப்பளவு வேக மாக குறைந்து வருகிறது. தருமபுரி  மாவட்டத்தில்  10 அணை கள்,  83 ஏரிகள், 769  சிறிய  ஏரிகள்   என மொத்தம் 1230 நீர்நிலைகள்  உள்ளன.

ஒகேனக்கல் குடிநீர்த்  திட்டப் பகுதியில் மழைக்காலங் களில் கிடைக்கும் உபரிநீரை குழாய்கள் மூலம் கொண்டு வந்து  1230 நீர்நிலைகளிலும் நிரப்புவது தான் தருமபுரி மாவட்ட காவிரி உபரி நீர் திட்டமாகும்.  இந்தத் திட்டத்திற்கு அதிகபட்ச மாக ஆண்டுக்கு 3 டி.எம்.சி. நீர்  மட்டும் தான் தேவைப்படும். ஆனால்,  ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 டி.எம்.சி-க்கும் கூடுதலான தண்ணீர்  கடலில் கலந்து வீணாகிறது. காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயம் செழித்து, வேலைவாய்ப்புகளும், பிற வாழ்வாதார வாய்ப்புகளும் ஏற் படும்.  எனவே,  ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகளின் எதிர்ப்பார்ப் பாக உள்ளது. எனவே, தேர்தலின் போது அளித்த  வாக்குறுதியின்படி   காவிரி  உபரிநீர் பாசனத் திட்டத்தை செயல் படுத்த வேண்டும்.  கர்நாடகா மாநிலம் மேகதாது எனும் இடத்தில் தடுப்பணை கட்ட  முயற்சித்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் மட்டுமன்றி, தருமபுரி  மாவட்டமும் குடிநீருக்கே பெரும் பஞ்சம் ஏற்படும். எனவே, கர்நாடகா  அரசு, மேகதாதுவில் அணைகட்டும் முயற்சியை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தவேண்டும்.

நீர்நிலைகளை மேம்படுத்துக 

தருமபுரி மாவட்டம் முழுவதும் பரவலாக தடுப்பணைகள் அமைப்ப தால் நீர்வளத்தை மேம்படுத்த முடியும். மேலும், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஈச்சம் பாடி அணைகட்டிலிருந்து, நீரேற்றம் செய்வதன் மூலம் மொரப் பூர், கடத்தூர், அரூர், பாப்பிரெட்டிப் பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி களில் தண்ணீர் நிரப்பும் திட்டத்தை  செயல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே செனாக்கல் எனும் இடத் தில் அணைகட்டுவதின் மூலம் அரூர்  வட்டத்தின் ஒரு பகுதி பாசனத்திற்கு உதவும்.  அதே போன்று பிக்கிலி ஊராட்சி சின்னாற்றின் குறுக்கே கூட்டாறு தடுப்பணை திட்டம், பொம்மிடி அருகே வேம்படி ஆற்றின் குறுக்கே  தடுப்பணை அமைப்பதின் மூலம் நீரா தாரங்களை உருவாக்க முடியும். அரூர் வாணியாறு, வள்ளிமதுரை  அணைகட்டுகளின் கால்காய்களை நீட்டிப்பு செய்வதன் மூலம் பாசன பரப்பளவு விரிவடையும். சின்னாறு அணை நீரை பாலக்கோடு வட்டத் தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நிரப்ப வேண்டும். தொள்ளகாது தடுப்பணை அமைக்கவேண்டும் என விவசாயிகளின்  கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் 

தருமபுரி மாவட்டத்தில் புரோரைடு கலந்த  குடிநீரை பருகு வதால் மக்களுக்கு பல்வேறு உடல்  உபாதைகள் ஏற்படுகிறது. இதனால்,  ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறை வேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல் வேறு அரசியல் கட்சிகள் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதன் விளை வாக, கடந்த 2008 ஆம் ஆண்டு, ஜப்பான் நாட்டு நிதி உதவியிடன் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் நிறை வேற்றப்பட்டது. இந்நிலையில், ஒகேனக்கல் குடி நீர் திட்டம், குக்கிராமம் மற்றும்  மழை கிராமங்களுக்கு செல்ல வில்லை. ஒகேனக்கல் குடிநீர்  பற்றாக்குறையினால் பல கிராமங் களில் உப்பு நீருடன் ஒகேனக்கல் குடிநீரை கலந்து விநியோகம் செய் யப்படும் அவலநிலை உள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தின் உள்ள அனைத்து கிராமங்களுக்கு சென்றடையும் வகையில், ஒகேனக் கல் 2ஆவது குடிநீர் திட்டம் நிறை வேற்றப்படும் என தமிழ்நாடு அரசு  அறிவித்திருக்கிறது. ஆனால் இது வரை பணிகளை தொடங்கவில்லை. எனவே, நிதிஒதுக்கீடு செய்து பணி களை துவக்க வேண்டும்.

நடைபயணம்

காவிரி உபரிநீர் திட்டத்தை நிறை வேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், அனைத்து ஊராட்சிகளிலும் மனு அளிக்கும் போராட்டம், அரூரில் மக்கள் கோரிக்கை மாநாடு, மக்கள் சந்திப்பு இயக்கம் என பல்வேறு போராட்டங்களை நடத்தியது.  அதன் தொடர்ச்சியாக, காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கர்நாடகா அரசு, மேக தாதுவில் அணைகட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். ஒகேனக் கல் 2ஆவது குடிநீர் திட்ட பணி களை துவக்க வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  ஆக.16 ஆம் தேதி முதல் ஆக.18 ஆம் தேதி வரை தருமபுரி மாவட்டம் முழுவதும் நடைபயணம் மேற் கொள்கிறது.  இந்த நடைபயணத்தை, சட்ட மன்ற உறுப்பினர் நாகைமாலி துவக்கி வைக்கிறார். ஆக.18 ஆம்  தேதியன்று நடைபயணத்தின் நிறை வாக, தருமபுரி மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற உள்ளது.  இப்போராட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் ஏ. குமார், மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.டில்லிபாபு, ஆர்.சிசுபாலன், மூத்த  தலைவர் பி.இளம்பரிதி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்று பேச உள்ளனர். 

-ஜி.லெனின்