திருப்பூர், அக். 18 – திருப்பூரில் உள்ள குடிநீர் வடி கால் வாரிய பராமரிப்புக் கோட்ட அலுவலகத்தில் களப்பணியாளர் கள் போனஸ், சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு கோட்ட அலுவலகம் ஐயப்பன் கோயில் எதிரில் ஓடக் காட்டில் உள்ளது. செவ்வாயன்று இந்த அலுவலகத்தில் களப்ப ணியாளர்கள் முப்பதுக்கும் மேற்பட் டோர் தரையில் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறியதாவது: நீண்ட நாட்களாக பல கோரிக்கைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது. எழுத் துப்பூர்வமாக முறையிட்டாலும் எந்த பதிலும் இல்லை; நேரடியாக கேட் கும்பொழுது பணி செய்ய ஆட்கள் இல்லை, என்கின்றனர். குறிப்பாக, மாதந்தோறும் சம்ப ளப் பட்டியல் சரியாக வழங்குவ தில்லை. வருடாந்திர ஊதிய உயர்வு, ஊதிய மறு நிர்ணயம், சேமநல நிதி முன்பணம், தேர்வு நிலை சிறப்பு நிலை ஆகிய எதற்கும் தொழிலா ளிக்கு தர வேண்டிய நகல் தருவ தில்லை. 30 ஆண்டுகள் பணி முடித்த 15க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகை இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட வில்லை.
தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு வாரிய உத்தரவுப்படி ஊதியம் நிர்ண யம் செய்து நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. பலருக்கு இன் னும் ஊதிய மறுநிர்ணயம் செய்யப்ப டவில்லை. நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் வழங்கப்பட வில்லை. ஒரு ஆண்டு காலமாக பண் டிகை, தேசிய விடுமுறை நாட்களில் பணிபுரிந்த 9 நாட்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கவில்லை. தீபா வளி பண்டிகை முன்பணம் இன்னும் வழங்கவில்லை, எனவே இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரி வித்தனர். இப்போராட்டத்தில் குடிநீர் வடி கால் வாரிய கோவை கோட்டச் செய லாளர் ஆர்.சரவணன், ஈரோடு கோட் டச் செயலாளர் எஸ்.சி.பிரகாசம், மாநிலப் பொருளாளர் பி.குணசேக ரன், கோட்டப் பொருளாளர் கே.ஆர். ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்நிலையில், திருப்பூர் பராம ரிப்புக் கோட்ட நிர்வாக பொறியாளர் கண்ணன், இவர்களுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தற்காலிக பணியாளர்க ளின் ஊதிய நிலுவை மற்றும் போனஸ் குறித்து ஒப்பந்ததாரர்க ளிடம் பேசி, ஓரிரு நாளில் தீர்வு கண்டு பட்டுவாடா செய்யப்படும் என்றும், நிரந்தரப் பணியாளர்களின் பல கோரிக்கைகள் குறித்து வாரியத் துக்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பி ஒரு மாத காலத்தில் உரிய தீர்வு காண்பதாகவும் உறுதியளிக்கப்பட் டது. இதன் அடிப்படையில், சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டம் நிறைவு பெற்றது.