நாமக்கல், ஜுன் 14- புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடை பெற்ற கூட்டத்திற்கு ஆட்சியர் ச.உமா தலைமை வகித்தார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் கண்ணன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலகர்கள் பங்கேற் றனர். இதுகுறித்து ஆட்சியர் ச.உமா கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. தொழில் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக, மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்து தேவையான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதர மாநிலங்களிலிருந்து வருகிற தொழிலாளர்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடை முறைகள் மற்றும் காவல் துறையினரால் தெரிவிக்கப்படும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது. தொழிலாளர் நலன் மற்றும் சுகாதாரமான முறையினை கடைபிடித்து, குழந்தை தொழிலாளர் இல்லாத தொழிற் சாலைகளாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை நிறுவ னங்கள் அனைத்தும், தாங்கள் பணியமர்த்துகின்ற புலம் பெயர் தொழிலாளர்கள் முழுமையான விபரங்களை தெரி விக்க வேண்டும். அவர்களின், குடும்ப பின்னணி அவசர சூழ்நிலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய குடும்ப உற வினர் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். புலம் பெயர் தொழிலாளர்களின் அடையாளங்கள் முறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் 5 பேருக்கும் மேற்பட்ட புலம் பெயர் தொழி லாளர் இருந்தால் உரிமம் பெறுவதற்கு பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்வதற்கான நடைமுறை ஆன் லைன் மூலமாக, WWW.dish.tn.gov.in என்ற இணைய தளத்தில், தொழிற்சாலை விபரங்கள் மற்றும் தேவையான ஆவணங் களுடன் உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மேலும், மாவட்ட அளவில் தொழிற்சாலைகளில் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக இருக்க வேண்டும். இதில் ஏதேனும் விதிமுறை மீறல்கள் இருப்பின் கடுமையான நடவடிக்கை மேற்கொள் ளப்படும், என்றார். இக்கூட்டத்தில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் (இணை இயக்குநர்) தினகரன், தொழி லாளர் நலத்துறை உதவி ஆணையர் எல்.திருநந்தன் ஆகி யோர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.