தாராபுரம், அக். 15 - தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் காய்ச் சல் பரவுவதை தடுப்பது குறித்து ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. தாராபுரம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் அலு வலகத்தில் ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஈ.சசிகுமார், ஆணையா ளர் சே.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற பொருளாக 28 தீர்மானங்கள் வைக்கப்பட்டிருந்தது. அந்த தீர்மானங்களை ஊராட்சி ஒன்றிய அலுவ லக மேலாளர் புருஷோத்தமன் வாசித்தார். இக்கூட்டத்தில் தாராபுரம் ஊராட்சி ஒன் றிய பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக காய்ச்சல் பரவி வருகிறது. அதற்கு ஒவ் வொரு ஊராட்சியிலும் கொசு மருந்து தெளிக்க கூடுதலாக பத்து நபர்களை நிய மிக்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் ஊராட்சி ஒன்றிய உட்பட்ட அனைத்து ஊராட் சிகளிலும் டெங்கு மற்றும் மலேரியா காய்ச் சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப் படும். அதேபோல வார்டு கவுன்சிலர்கள் ஒவ் வொரு ஊராட்சி பகுதியில் கொசு மருந்து தெளிக்க ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கவேண்டும். சின்னபுத்தூர் ஊராட்சி யில் மார்பளவு கொண்ட திமுக முன்னாள் தலைவர் மு கருணாநிதியின் சிலை வைப்பது, மேலும் அனைத்து ஊராட்சிகளுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவது உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பழனிச்சாமி, கீதாலட்சுமி, கலைச்செல்வி, செல்வி, வேதநாயகம், சுகப்பிரியா, தெய்வசி காமணி, துர்க்கேஸ்வரி, சிலம்பரசன் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.