பள்ளிபாளையம், ஜூன் 16- நாமக்கல் அருகே பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொலையில் உண்மைக் குற்ற வாளி கண்டறிய சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அப்பாவி விவ சாயிகள் மிரட்டப்படுவதாக சோழசிறாமணி பேருந்து நிலையத்தில் வெள்ளியன்று விவ சாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம் பட்டதாரி பெண் பாலியல் வன்கொ டுமை செய்து, படுகொலை செய்யப்பட்டார். இதில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டங்க ளில் ஈடுபட்டனர். மேலும், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.
இத னையடுத்து, தமிழ்நாடு அரசு இளம்பெண் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தவிட்டது. இந்நிலையில், ஜேடர்பாளையம் காவல் நிலையம் பகுதிகளை உள்ளடக்கிய பல் வேறு கிராமங்களில் உள்ள அப்பாவி விவ சாயிகளை காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று குற்றத்தை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்பந்தப்படுத்துவ தாக தெரிய வருகிறது. இச்செயல் மனித உரிமை மீறலாகும். உடனடியாக காவல் துறை இந்த நடவடிக்கையை கைவிட வேண் டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.பெருமாள் தலைமை வகித்தார். இதில் வழக்கறிஞர் கார்த்திகே யன், மாவட்ட விவசாய சங்க செயலாளர் கே.கே.கணேசன், தமிழ்நாடு கரும்பு விவசா யிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.நல்லா கவுண்டர், கரும்பு விவசாயிகள் சங்க எம்.காத்தவராயன், விவசாய சங்க மாவட்ட தலைவர் ஏ.ஆதிநாராயணன் உள் ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பள்ளி பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர். ரவி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எம். லட்சுமணன், விவசாய சங்க மாவட்ட நிர்வா கிகள் கே.பூபதி, என்.ஜோதி, ஆர்.வேலாயு தம் மற்றும் பி.சண்முகம், எம். தனேந்திரன், கே.கிருஷ்ணன், மொளசி கே.பூபதி, பொது மக்கள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.