districts

img

குரூப் 1 தேர்வில் சாதித்த பெண் அரசு ஊழியர்கள்

திருப்பூர், ஏப். 25 -  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் பெண் அரசு ஊழியர்கள் 3 பேர் குரூப் 1-  தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 நடத் திய தேர்வில் வெற்றி பெற்று, சமீ பத்தில் வெளியான முடிவுகளில் மூன்று பெண் அரசு ஊழியர்கள் உதவி ஆட்சியர் உள்ளிட்ட அதிகா ரிகளாக பதவி ஏற்க உள்ளனர்.  ஈரோடு மாவட்டம் நம்பியூர் சின்ன செட்டிபாளையத்தைச் சேர்ந் தவர் சுபாஷினி (26). பொறியியல் பட்டதாரி. தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று, கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் திருப்பூர் கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளராக பணி யாற்றி வருகிறார். இந்த வேலைக்கு  இடையே, தொடர்ந்து குரூப் 1 போட் டித் தேர்வுக்கான படிப்பையும் கைவிடாது படித்து இன்றைக்கு, குரூப் 1 தேர்வில் தமிழ்நாட்டில் 49- ஆம் இடம் பிடித்து கூட்டுறவுத் துறையிலேயே, துணைப் பதி வாளர் பணிக்கு தேர்வாகி உள் ளார்.  உடுமலையை சேர்ந்தவர் இந்திரா பிரியதர்ஷினி (28). பிஎஸ்சி வேளாண்மை படித்த வர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்கு ளத்தில் வேளாண்மை அலுவல ராக கடந்த 2019-ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்து தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். தொடர்ந்து, குரூப் 1 தேர்வில் 35ஆம் இடத்தை பிடித்து வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பொறுப் பேற்க உள்ளார். இந்திரா பிரிய தர்ஷினி கூறும்போது, “வேளாண்மை அலுவலராக இருந் ததால், பல்வேறு பகுதிகளில் பணி யிடங்களுக்கு சென்று விட்டு வீடு திரும்பவே தாமதமாகும். ஆனால் தொடர்ந்து குரூப் 1 தேர்வுக்கு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் படித்து வந்தேன். இன்றைக்கு வெற்றி பெற்றுள்ளேன் என்றார். இவரது தந்தை கேசவன். தொழில் செய்து வருகிறார். தாய் ரேகாதேவி செஞ்சேரிப்புத்தூர் அரசுப் பள்ளி ஆசிரியை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4-ல் வெற்றி  பெற்று இளநிலை உதவியாளராக கடந்த 2020-ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்தவர் நித்யா (26). பிஎஸ்சி வேளாண்மை படித்தவர். அரசு வேலை கிடைத்துவிட்டது என தேங்கிவிடாமல்,  தொடர்ந்து படித்து வேளாண்மை அலுவல ராக குரூப் 2 தேர்வில் தேர்ச்சி  பெற்று, மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் பணியாற்றுகிறார். இன்றைக்கு அதையும் கடந்து, குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து, கிடைக்கும் நேரங்களில் படித்து இன்றைக்கு 10-ஆம் இடத்தை பிடித்து உதவி ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழ னிசாமி - பழனியம்மாளின் மகள் இவர். மூவரும் கூறும்போது, “தமிழ் நாட்டில் குரூப் 1-இல் 95 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 3 பேர்  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் பணியாற்றி வருவது எங்களுக்கு ஆச்சர்யம். அரசு வேலை கிடைத்த பின்பும், மனம் தளராமல் தொடர்ந்து படித்தோம். வாழ்க்கையின் எந்த இடத்திலும் நாங்கள் தேங்கவில்லை. எங்க ளின் அடுத்தடுத்த முயற்சிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1-  வெற்றிக்கு மிக முக்கிய கார ணம்.” என்கின்றனர்.