மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
திருப்பூர், பிப்.11- தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாநகராட்சி நடுநி லைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி னார். திருப்பூர் மாநகராட்சி, தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் திங்களன்று நடைபெற்ற தேசிய குடற் புழு நீக்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் திரு.தா.கிறிஸ்து ராஜ் குடற்புழு நீக்க மாத்திரைகளை பள்ளி மாணவ, மாணவி யர்களுக்கு வழங்கினார். மேலும், குடற்புழு நீக்கம் குறித்து பள்ளி மாணவ, மாணவியர்கள் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதைதொடர்ந்து, தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்க உறுதி மொழி பள்ளி மாணவ, மாணவியர்கள் எடுத்துக்கொண்ட னர். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் எஸ்.ராமமூர்த்தி, மாநகர நல அலுவலர் முருகானந்தம், தொடர்பு டைய அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவி யர்கள் கலந்து கொண்டனர்.
புற்றுநோய் நோயாளிகளுக்கு புத்துணர்வு மையப்பணி; அமைச்சர் துவக்கி வைப்பு
திருப்பூர், பிப்.11- திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் ரோட்டரி மற்றும் பொது நல அறக்கட் டளை சார்பில் ரூ.90 கோடி செலவில் அதி நவீன புற்றுநோய் மையம் பணிகள் நடை பெற்று வருகிறது. அதிகளவிலான தொழில் துறை பணியாளர்கள் இருப்பதால் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் புற்றுநோய் மையத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விரிவான மருத்துவ அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு புற்று நோயியல் பிரிவு, ஐஎம்ஆர்டி, ஐஜிஆர்டி, எச்டிஆர் உள் கதிர்வீச்சு மருத்துவம், மருத் துவ புற்று நோயியல் பிரிவு, அறுவை சிகிச்சை புற்று நோயியல் பிரிவு, அணு மருத்துவம் முழு உடல் பெட் சிடி ஸ்கேன், இருதய மருத் துவ கேத் லேப் உள்ளிட்ட நவீன வசதிகளு டன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் நோயாளிகளின் புத்துணர்வு மைய கட்டிடம் கட்டும் பணியை செவ்வா யன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். இதைதொடர்ந்து, ராம்ராஜ் காட்டன் நிறு வனர் கே.ஆர்.நாகராஜன் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடிக் கான காசோலையை அமைச்சரிடம் வழங்கி னார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், மேயர் நா.தினேஷ் குமார் உட் பட பலர் கலந்து கொண்டனர்.
காலிபிளவர் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு
திருப்பூர், பிப்.11- தென்னம்பாளையம் சந்தைக்கு காலிபிளவர் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு குறைந்துள்ளது. இருப்பினும் வியாபாரம் சரிவர ஆகவில்லை என காலிபிளவர் வியாபாரி கள் தெரிவித்தனர். திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு திருப்பூர் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக் காக கொண்டு வரப்படுகிறது. இங்கு திருப்பூர் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக காலிபிளவர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த வாரங்களை விட காலிபிளவர் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து காலிபிளவர் வியாபாரிகள் சிலர் கூறுகை யில், தாளவாடி பகுதியில் இருந்து காலிபிளவர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மொத்த விலையில் 20 காலிபிளவர் பூக்கள் கொண்ட பை 250 ருபாய்க்கும், சில்லறை விலையில் ஒரு காலிபிளவர் 15 முதல் 20 ருபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான வியாபா ரிகளும் காலிபிளப்வர் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்திருப்பதால் விலை குறைந்திருந்தாலும், எதிர்பார்த்த வியாபாரம் ஆகவில்லை என தெரிவித்தனர்.
பிப்.18, 19 ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்
திருப்பூர், பிப்.11- தமிழ்நாடு கடல்சார் வாரியம் மற்றும் எல்&டி ஷிப் பில்டிங் லிமிடெட் சார்பில் திருப்பூரில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக் கான வேலைவாய்ப்பு முகாம் பிப்.18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள் ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு கடல் சார் வாரியம் மற்றும் எல்&டி ஷிப் பில்டிங் லிமிடெட் உடன் இணைந்து துறைமுகம் மற்றும் கடல் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் நோக்கில் திருப்பூர் மாவட் டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில், தேர்வு செய்யப்படுபவா்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் உதவியுடன் திறன் பயிற்சி அளித்து எல்&டி ஷிப் பில்டிங் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வெல்டர், பிட்டர், எலெக்ட்ரீஷியன், மெஷினிஸ்ட், டர்னா், டூல் அண்ட் டை மேக்கர் ஆகிய தொழிற் பிரிவுகளைச் சேர்ந்த ஐடிஐ பயிற்சியாளர்கள் பங்கேற்கலாம். இம்முகாம் திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத் தில் பிப்.18 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத் தில் பிப்.19 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறுகிறது. எனவே, ஐடிஐ தேர்ச்சிபெற்ற பயிற்சியாளர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் எனக் கூறப் பட்டுள்ளது.