தருமபுரி, ஜன.27- தேசத்தந்தை மகாத்மா காந்தியையும், சுதந்திர போராட் டத்தையும் இழிவுபடுத்தி பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் சனியன்று காங்கி ரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதி யாக தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டத் தலைவர் பி.தீர்த்த ராமன் தலைமை வகித்தார். இதில் மாவட்டப் பொருளாளர் வடிவேல், பொதுக்குழு உறுப்பினர் ஜெயசங்கர், நகரத் தலை வர் வேடி, மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் காளியம் மாள், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் தங்கவேல், சிறு பான்மை பிரிவுத் தலைவர் முபாரக், விவசாய அணித் தலை வர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.