திருப்பூர், பிப்.6- முன்னறிவிப்பின்றி கடந்த ஆண்டு நவ.3 தேதி அகற்றப்பட்ட மாட்டிறைச்சி கடைக்கு மாற்று இடம் சர்வே செய்து காட்டப்பட் டும், இன்னும் கடை அமைக்க உரிய அனுமதி வழங்கப்படாததை கண் டித்து வட்டாட்சியர் அலுவல கம் முன்பு செவ்வாயன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் வட்டம் முத்தணம்பாளையம் கிராமம், கோவிழ்வழி பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மாட்டி றைச்சி கடைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் முன்னறிவிப்பின்றி கடந்த ஆண்டு நவ.3 தேதி அகற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும் பங்கள் சார்பில் 4 ஆம் தேதி மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளிக்கப்பட்டது. இதன் மீது உடனடி நடவடிக்கையாக மாற்று அரசு புறம் போக்கு காலியிடம் க.ச.335/1 வருவாய்த் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தால் நவ.6 ஆம் தேதி சர்வே செய்து காட்டப் பட்டது. இருந்தும், இது வரை கடை அமைக்க உரிய அனுமதி வழங்கப்படவில்லை. பல முறை திருப்பூர் தெற்கு வட்டாட்சியரை நேரில் தொடர்பு கொண்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ஆதரவாக மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய முற் போக்கு அமைப்புகள் ஒரு நாள் உண்ணா விரத போராட்டம் நடத்தப்போவதாக அறி வித்திருந்தனர். அதன் படி ஆதிதமிழர் பேரவை வடக்கு மாவட்டச் செயலாளர் அவிநாசி க.மணி தலை மையில் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலு வலகம் முன்பு செவ்வாயன்று உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. இதை ஆதித்தமிழர் பேரவை துணைப்பொதுச் செயலாளர் அர.விடுதலைச்செல்வன் துவக்கி வைத்தார். மாநிலத் தலைவர் அ.சு. பவுத்தன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ், துணைத் தலைவர் வீரபாண்டி எஸ்.சண்மு கம், திராவிடர் விடுதலை கழகம் மாவட்டத் தலைவர் முகில் ராசு உட்பட பலர் பங் கேற்றனர்.