கோவை, நவ.17- மின் இணைப்பு வழங்கக் கோரி கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும் பத்துடன் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கோவை, சாய்பாபா காலனி அருகே உள்ள கண்ணப்பபுரத்தைச் சேர்ந் தவர் வெங்கடேஷ் (45). பெயிண்டரான இவரது மனைவி கீதாராணி. இவர் களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கீதாரணியின் வீட்டின் அருகே குடியிருக்கும் அவரது அண்ணன் கோவை குமார் என்பவர் மின் இணைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து வெங்கடேஷ், கீதாராணி ஆகியோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். ஆனால், எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், வெங்கடேஷ், கீதாராணி ஆகியோர் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்களது 2 மகன்களுடன் மின் இணைப்பை உடனடியாக வழங்கக் கோரியும், கோவை குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.