districts

img

விவசாயிகள் சங்க தலைவர் படத்திறப்பு

கோவை, பிப்.21- சூலூர் தாலுகா, சுல்தான் பேட்டை ஒன்றிய விவசாயி கள் சங்க நிர்வாகி மறைந்த திருமலைசாமி படததிறப்பு விழா மற்றும் நினைவேந் தல் நிகழ்வு நடைபெற்றது.  தமிழ்நாடு விவசாயிகள்  சங்க நிர்வாகிகளில் ஒருவ ரான திருமலைசாமி அண் மையில் காலமானார். இவரது படத்திறப்பு மற்றும்நினைவேந்தல் நிகழ்வு, செஞ்சேரி மலையில் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட்  கட்சி கிளை செயலாளர்  சபரீஸ்வரன் தலைமை ஏற்றார். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் பங்கேற்று, மறைந்த திருமலை சாமியின் உருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துகண்ணன், விவசாய சங்க கோவை மாவட்ட  செயலா ளர் வி.ஆர்.பழனிச்சாமி, சிபிஎம் சூலூர் தாலுகா செயலாளர் ஏ.சந்திரன், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.பி.சிவக் குமார், கொமதேக நிர்வாகி சு.கிரி, தமாக நிர்வாகி தங்கவேல், விசிக மாவட்ட அமைப்பு செயலாளர் தர்மராஜ், வாரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், இ.மகேந்திரன், மலைப் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர், வெ. ரங்கநாதன் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.