districts

தெருநாய்களால் கால்நடைகள் பறிபோகும் வேதனை கிராமசபை கூட்டங்களில் விவசாயிகள் போராட்டம்

திருப்பூர், ஜன.30– தெருநாய்களால் கால்நடைகள் பறிபோகும் வேதனைச் சம்பவங்கள்  தினந்தோறும் நடந்து வரும் நிலை யில் இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க வலியுறுத்தி குடியரசு  தினத்தில் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங் களில் விவசாயிகள் போராட்டங்க ளில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் குறிப் பாக வெள்ளகோவில், காங்கேயம், ஊத்துக்குளி ஒன்றியங்களில் தெரு நாய்கள் கடித்துக் குதறி ஆடுகள்,  கன்றுக்குட்டிகள், கோழிகள் உயி ரிழக்கும் சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகின்றன. இப்பிரச்சனையில் தெருநாய் பெருக் கத்தைக் கட்டுப்படுத்தவும், தெரு நாய்களால் கால்நடைகளை இழந்த  விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரி  வருகின்றனர். குறிப்பாக விவசாயம்  கடும் நெருக்கடியில் இருக்கும் நிலை யில் கால்நடை வளர்ப்புத்தான் அவர் களுக்குக் கை கொடுத்து வருகிறது. கும்பலாக கிராமங்களில், நகரங்க ளில் சுற்றுத்திரியும் நாய்களால் பட்டி களில் அடைக்கப்பட்டிருக்கும் ஆடு கள், கன்றுக்குட்டிகள், பண்ணைக ளில் வளர்க்கப்படும் கோழிகள் என  மொத்தமாக கடித்துக் குதறப்பட்டு உயிரிழக்கின்றன. இதனால் கால் நடை வளர்ப்பை மட்டுமே நம்பிப் பிழைக்கும் விவசாயிகளுக்கு லட்சக் கணக்கான ரூபாய் வருமான இழப்பு  ஏற்படுவதுடன், அடுத்து என்ன செய் வதென்று தெரியாத நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதற்காக பல கட்டப் போராட்டங் களை முன்னெடுத்த நிலையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பாதிக் கப்பட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி அரசின் கவனத் துக்குக் கொண்டு சென்று 45 நாட்க ளில் உரிய இழப்பீடு பெற்றுத் தருவ தாக காங்கேயம் வட்டாட்சியர் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதற்காக காத்திருந்த நிலையில் அரசு எவ்வித உத்தரவும் பிறப்பிக் காததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதேசமயம் தெருநாய்  பிரச்சனை தீராத தலைவலியாக  தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே அடுத்தக்கட்ட போராட் டத்தை நடத்துவது பற்றி விவசாயி கள் பலவிதமான ஆலோசனைகளை மேற்கொண்டனர். இதற்கிடையே அமைச்சர் மு.பெ.சாமிநாதனை விவ சாயிகள் சந்தித்து உயிரிழந்த கால்ந டைகளுக்கு சந்தை மதிப்பில் இழப் பீடு கோரினர். அவரும் உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த சூழ்நிலையில் ஜனவரி 26  குடியரசு தின கிராமசபைக் கூட்டங் கள் அறிவிக்கப்பட்டன. இந்த கூட்டங் களையே தெருநாய்களால் கால்ந டைகள் இழக்கப்படும் பிரச்ச னையை முன்வைத்து போராட்டங் கள் நடத்த திட்டமிட்டனர். அதன்படி குடியரசு தினத்தன்று வெள்ளகோவில், காங்கேயம், ஊத் துக்குளி ஆகிய ஊராட்சி ஒன்றியங் களில் ஊராட்சிகளில் நடைபெற்ற 25  கிராமசபைகளில் இது குறித்து கால்ந டைகளுடன் பங்கேற்ற விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்புக்  கொடி ஏந்தியும், ஏற்கெனவே அரசு  கொடுத்த உறுதிமொழி என்ன ஆனது  என்று கேள்வி எழுப்பியும் போராட் டம் நடத்தினர். இப்பிரச்சனையில் மாவட்ட நிர் வாகத்தின் சார்பில் அடுத்த 20 நாட்க ளில் இழப்பீடு பெற்றுத் தரப்படும்  என்று காங்கேயம் வட்டாட்சியர் மோகனன் போராடிய விவசாயிக ளிடம் எழுத்துப்பூர்வமாக மீண்டும் உத்தரவாதம் அளித்தார். ஏற்கெனவே 45 நாட்கள் காத்தி ருந்த நிலையில் மீண்டும் 20 நாட் கள் காத்திருப்பதென்று விவசாயி கள் தீர்மானித்துள்ளனர். அத்துடன் வரும் 31ஆம் தேதி திருப்பூர் மாவட்ட  விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடைபெற உள்ளது. இதிலும் தங்கள்  பிரச்சனையை எழுப்பி அரசின் கவ னத்தை ஈர்ப்போம் என்று விவசாயி கள் கூறியுள்ளனர்.