districts

img

அன்னூர் தொழிற்பூங்கா விவகாரம்

கோவை, டிச.16- அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க அனுமதிக்க முடியாது  என அப்பகுதி விவசாயிகள் தெரி வித்து வரும் நிலையில் விவசாயி களின் விளை நிலங்களை எக் காரணம் கொண்டும் எடுக்கப் படாது என தமிழக அரசு அறிக்கை  விடுத்துள்ளது. கோவை மாவட்டம், அன் னூரில் டிட்கோ தொழிற்பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கைகப்படுத்தப்படும் என அர சாணை வெளியிடப்பட்டது.  இதற்கு அன்னூர் சுற்றுவட்டார  பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு  தெரிவித்து, பலகட்ட போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர்.  அன்னூர் விவசாயிகளுக்கு ஆதர வாக மார்க்சிஸ்ட் கட்சியினர்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  உள்ளிட்ட பல்வேறு அமைப்பி னரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனிடையே விவசாயிகளின்  நிலம் அவர்களது அனுமதி இல் லாமல் எடுக்கப்படாது என  திமுகவைச் சேர்ந்த நீலகிரி நாடாளு மன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரி வித்தார். இந்நிலையில், நமது  நிலம் நமது போராட்டக்குழு தலைவர் ரவிக்குமார் மற்றும்  செயலாளர் ராஜா உள்ளிட்ட நிர் வாகிகள் கோயம்புத்தூர் பத்திரி கையாளர் மன்றத்தில் வெள்ளி யன்று செய்தியாளர்களை சந்தித் தனர்.

அப்போது அவர்கள் கூறு கையில், எங்கள் கருத்து ஒட்டு மொத்த விவசாயிகளின் கருத்து. விவசாயிகளின் நிலங்கள் எடுக்கப் படமாட்டாது என்று ஆ.ராசா எம்.பி.,  தெரிவித்தார். அதற்கு நன்றி.  ஆனால், இன்னும் முழுமை பெற வில்லை. அங்கு தொழிற்சாலை களோ, தொழிற்பூங்காவோ வரக் கூடாது. விவசாய நிலங்களை  பாதுகாக்க அன்னூர் உட்பட இரண்டு வட்டங்களை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். அரசு வெளி யிட்ட அரசாணையை திரும்பப் பெறுவதுடன், வேளாண் மண்டல மாக அறிவிக்க வேண்டும் என்பதே  எங்களின் பிரதானமாக கோரிக் கையாகும்.  விவசாயத்திற்கு நிலங் களை வாங்குவதாகக்கூறி  பெங்களூரை சேர்ந்த நிறுவனம் ஒன்று 1200 ஏக்கர் நிலங்களை வாங்கியுள்ளது. அவை ஒரே இடத்தில் அமையவில்லை. இரண்டு இடங்களில் மட்டும் 100  ஏக்கர் உள்ளது. மற்றவை எங்கள்  நிலங்களை சுற்றி பரவலாக உள்ளது.  அதனால் அங்கு தொழிற் சாலை அமைக்க சாத்தியமில்லை. 1200 ஏக்கரில் 200 ஏக்கர் நிலங் களை அந்த நிறுவனத்தினர் விற்று விட்டனர். ஏற்கனவே அன்னூர் அருகே காஸ்டிங் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு களால் ஆடுகள் பலியாகின. அப் போது எந்த அதிகாரியும் நடவ டிக்கை எடுக்க முன்வரவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி, அதிமுக, நாம்  தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றன. இங்கு தரிசு நிலம் என்ற பேச் சுக்கே இடமில்லை. மேய்ச்சலுக் காக விடும் நிலங்களை தரிசு நிலம்  என்று அரசு வரையறுக்க முயற்சிக் கிறது. தொழிற்சாலை அமைக்கும் நோக்கத்தோடும் யார் வந்தாலும் விளை நிலத்திற்குள் அனுமதிக்க மாட்டோம், என்றனர்.

தமிழக அரசு அறிக்கை

இந்நிலையில், தமிழக அரசு வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட் டம், அன்னூர் மற்றும் மேட்டுப் பாளையம் வட்டங்களில் தமிழ் நாடு தொழில்வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் அரசு ஒரு தொழிற்  பூங்காவை நிறுவ முடிவு எடுத்தது.  கோவை மாவட்டத்தை பொருளா தாரத்தில் மேம்பட்ட மாவட்டமாக தொடர்ந்து தக்க வைக்கவும், அதிக  வேலைவாய்ப்புகளை ஏற்படுத் தவும், தொழிற்பூங்கா அமைக்க 3862 ஏக்கர் நிலம் தெரிவு செய் யப்பட்டு, (அரசு ஆணை எண்  202, தொழில் மு.ஊ (ம) வர்த்தகத்  (எ.ஐ.இ.1) துறை நாள் 10.10.2022)  அதற்கான ஆணை பிறப்பிக்கப் பட்டது. இதில், விவசாய பெரு மக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு விவசாய நிலங் களை விடுத்து, தனியார் நிறுவ னங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும்.  எந்தவித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு திருப்திகரமான இழப்பீடு வழங் கப்படும். விவசாயிகளின் நலனில்  எப்போதும் அக்கறை கொண் டுள்ள தமிழக அரசு, அவர்களின் நலனிற்காக மட்டுமே செயல்படும். இத்தொழிற்பூங்காவில் அமை யவிருக்கும் தொழிற்சாலைகள் காற்று மற்றும் நிலத்தடி நீரை மாசு படுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும். எனவே,  டிட்கோ மூலம் தனியார் நிறுவனங் களுக்குச் சொந்தமான தரிசு நிலங் களில் மட்டுமே தொழிற்பூங்கா அமைக்க தற்போது அரசு நடவ டிக்கை எடுத்து வருகிறது என தெரி விக்கப்பட்டுள்ளது.