districts

img

பிஏபி-யில் கூடுதல் தண்ணீர் அமைச்சர்களிடம் விவசாயிகள் நேரில் வலியுறுத்தல்

திருப்பூர், டிச. 2 - பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத் தில் ஆனைமலை ஆறு நல்லாறு அணை திட்டங்களை நிறைவேற்றவும், பகிர்மான குழு திட்டக்குழு தேர்தல்களை நடத்தவும் மாநில அமைச்சர்களிடம் பிஏபி விவசா யிகள் நேரில் வலியுறுத்தினர். வியாழக்கிழமை சென்னை தலைமைச்  செயலகத்தில், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், நல்லாறு அணை மற்றும் ஆனைலையாறு அணைத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். பாலாறு படுகை மற்றும் ஆழியாறு படுகையில் பகிர்மான குழு மற்றும் திட்டக் குழு தேர்தலை நடத்த வேண் டும். பரம்பிக்குளம் பிரதானக் கால்வாய், உடுமலைப்பேட்டை பிரதானக் கால்வாய் உள்ளிட்ட அனைத்துக் கால்வாய்களையும் புதுப்பித்திட தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், பாசன சங்கங்களுக்கு வருடாந்திர பராமரிப்பு நிதி ஒதுக்க வேண் டும்,  போதுமான அளவு நீர் விநியோகி களை (லஸ்கர்கள்) நியமிக்க வேண்டும், 6  ஆயிரத்து 500 ஏக்கர் வரை உள்ள கால்வாய் களிலும் “ஒருமடை விட்டு ஒரு மடை” பாசன முறையை அமுல்படுத்த வேண்டும்,  பொள் ளாச்சியில் நீர்வளத்துறை அமைச்சர்  கலந்து கொள்ளும் பாசன கருத்தரங்கம் நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாநில நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் , முதல்வரின் தனிச்செய ளாளர்  உமாநாத், நீர் வளத்துறையின் துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோரைச் சந்தித்து மனுக்கள் கொடுக்கப்பட்டது.  மேலும், ஆழியாற்றிலிருந்து ஒட்டன்சத் திரத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை, திருப்பூர் மற்றும் கோவை மாவட் டங்களைச் சேர்ந்த பி ஏ பி  பாசன சங்க தலை வர்கள், ஆயக்கட்டு விவசாயிகள், பொது நல அமைப்புகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ரத்து செய்த தமிழக முதல்வருக்கும், அதற்கு துணையாக இருந்த அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிக ளுக்கும் நன்றி தெரிவித்தனர். இதில், மெடிக்கல் பரமசிவம், உடுக்கம் பாளையம் பரமசிவம் உள்ளிட்ட முன்னணி பிஏபி விவசாய சங்கத்தினர் பங்கேற்றனர்.