districts

img

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி விவசாயிகள் சென்னை பயணம்

உடுமலை, நவ. 25 – இந்திய விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி அரசை கண்டித்து நாடு முழுவதும்  மாநிலத் தலைநகரில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி  நடைபெறுகிறது. இதையொட்டி தமிழ்நாட்டில் சனியன்று காலை 10 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையை நோக்கி  ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நடைபெறவுள்ள பேர ணியில் கலந்து கொள்ள திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார்  தலைமையில் விவசாயிகள் வெள்ளியன்று ரயில் மூலம் புறப்பட்டுச் சென்றனர். அதேபோல் உடுமலைபேட்டையில் இருந்தும் விவசாய சங்க நிர்வாகிகள் புறப்பட்டுச் சென்ற னர்.