districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

முட்டைகோஸ் சாகுபடி: விவசாயிகள் ஆர்வம்

தருமபுரி, டிச.5- தருமபுரி மாவட்டத்தில் முட்டை கோஸ் சாகுபடியில் விவ சாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, காரி மங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், சுமார்  100 ஏக்கருக்குமேல் முட்டைகோஸ் சாகுபடி செய்துள்ளனர். முட்டைக்கோஸ் சாகுபடி குறைவான முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய பயிராக விளங்குகிறது. இதனால் விவ சாயிகள் ஆர்வத்துடன் பயிர் செய்கின்றனர்.  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், முட்டை கோஸில் கீரையில் உள்ள சத்துக்களான வைட்டமின் ஏ, பி, இ  சத்துக்கள் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந் துள்ளன. முட்டைக்கோஸின் பச்சை பகுதியாக உள்ள இலை களில் தான் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன. சமவெளி  பகுதிகளில் இது குளிர்கால பயிராக சாகுபடி செய்யப்ப டும். இந்த பயிருக்கு வடிகால் வசதி மிகவும் அவசியம். வண்டல், செம்மண் நிலங்களிலும் நன்றாக வளர கூடிய பயிரா கும். சமவெளிப்பகுதியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி போன்ற  மாதங்களில் சாகுபடி செய்யப்படுகிறது, என்றனர்.

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க செயற்கை குட்டைகள்

உதகை, டிச.5- நீலகிரி மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப் பாட்டை சமாளிக்க செயற்கை குளம், கிண றுகள் அமைத்து காய்கறி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் மலை பாங்கான பகுதி களை கொண்டது. இந்த மலைப்பாங்கான பகுதிகளிலும், பள்ளத்தாக்கு பகுதிகளிலும் விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு பெரும் பாலும் பருவமழை நம்பி விவசாயம் மேற் கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் 2 மாதங் கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இதைத்தொடர்ந்து, அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவம ழையும் பெய்யும். அதன்பின், 6 மாதங்கள்  மழை இருக்காது. இதுபோன்ற சமயங்க ளில் மலைப்பாங்கான பகுதிகளில் போதிய  தண்ணீரின்றி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற சமயங்க ளில் சில விவசாயிகள் லாரிகளில் தண்ணீர்  வாங்கி அவைகளை சேமித்து வைத்து பயிர்க ளுக்கு பாய்ச்ச வேண்டிய நிலைக்கு தள்ளப் படுகின்றனர். சாதாரண கிணறுகளில் தண்ணீர் சேமித்து வைக்க முடிவதில்லை. காரணம் கிணற்றில் உள்ள தண்ணீர் நிலத் திற்குள் சென்று விடுகிறது. இதனை கட்டுப்படுத்தவும், அதேசமயம் தண்ணீரை சேமித்து வைக்கவும், நிலத்திற்குள் செல் லாமல் இருக்க விவசாயிகள் செயற்கை குளங்களை அமைத்துக் கொள்கின்றனர். விவசாய நிலங்களுக்கு நடுவே பிளாஸ் டிக் பேப்பர்களை கொண்டு கிணறுகளை சுற்றிலும் வைத்து மூடி விடுகின்றனர். இத னால், சேமித்து வைக்கப்படும் தண்ணீர் மற்றும் லாரிகளில் வாங்கும் தண்ணீர் சிறித ளவும் வீணாகாமல் பயிர்களுக்கு பாய்ச்ச பயன்படுகிறது. முத்தோரை பாலாடா, கேத்தி  பாலாடா, தேனாடுகம்பை, காவிலோரை, அணிக்கொரை போன்ற பகுதியில் விவ சாய நிலங்களில் பிளாஸ்டிக் செயற்கை குளங்கள், கிணறுகள் அமைக்கப்பட்டு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணி மேற் கொள்ளப்படுகிறது. இம்முறை எதிர்பார்த்த அளவிற்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை பெய்யாததால், அனைத்து பகு திகளிலும் தற்போது பிளாஸ்டிக் குளங் கள், கிணறுகள் அமைத்து தண்ணீர் சேமிக் கப்படுகிறது. இதன் காரணமாக விவசாயி களுக்கு தண்ணீர் பிரச்சனை குறைந்துள் ளது.

நல்லா ஓடையில் விஷக்கழிவு நீர்
அமைச்சர் உத்தரவை மீறும் அதிகாரிகள்

ஈரோடு, டிச. 5- பெருந்துறை சிப்காட் நல்லா ஓடையில், விஷக்கழிவு நீர் வெளி யேற்றப்படுவதைக் கண்டித்து  பெருந்துறை மாசுக்கட்டுப்பாட்டு  வாரிய அலுவலகத்தில் காத்திருப்பு  போராட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் நல்லா ஓடை செல்கிறது. இதில், செவ்வாயன்று காலை 3850 டிடிஎஸ் அளவில் விஷக்கழிவுநீர்  சென்றது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து இதனை கண்டறிந்தனர். இது குறித்த அறிக்கையையும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கள் கொடுத்துள்ளனர். 500 டிடிஎஸ் க்கு மேல் கழிவுநீர் ஓடையில் கலந்தால், அந்த ஆலை கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சு முத்துசாமி அண் மையில் தெரிவித்திருந்தார். ஆனால், விஷக்கழிவு நீரை வெளி யேற்றும் ஆலைகள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி பெருந்துறை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆனால், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நடவடிக்கை பற்றி எந்த  வித விளக்கமும் கூறாமல் எழுந்து சென்றதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து, அமைச்சரின் உத்தரவை மதிக்காமல், அதிகா ரிகள் செயல்படுவதாகவும், 3850 டிடி எஸ் ஆலைகளின் விஷக்கழிவு நீர்  வெளியேற்றிய நிலையில், நடவ டிக்கை கோரி ஏராளமானோர் சிப்காட்  மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவ லகத்தில் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகி லன், சென்னிமலை பூப்பறிக்கும் மலை பாதுகாப்பு இயக்க ஒருங்கி ணைப்பாளர் சதீஷ் உள்ளிட்டோரும் போராட்டத்தில் இனைந்தனர்

காங்கயத்தில் அர்ச்சுனன் மன்றாடியார் நூற்றாண்டு விழா

திருப்பூர், டிச.5- திராவிடர் கழகத்தில் இணைந்து பணி யாற்றிய அர்ச்சுனன்  மன்றாடியாரின் நூற் றாண்டு விழா காங்கயத்தில் நடைபெற்றது. அர்ச்சுனன் மன்றாடியாரின் நூற்றாண்டு  விழா தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார் பில், காங்கயம் நகரம், சென்னிமலை சாலை யில் உள்ள தனியார் மண்டபத்தில் நடை பெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகத் தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை வகித்தார். இதில் தமிழகம் இழந்த தளபதி எனும் தலைப்பில் அர்ச்சு னன் மன்றாடியார் குறித்த நூலை திமுக சுற் றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வெளியிட்டார். பழையகோட்டை எஸ்.பி.எம்., கல்வி நிறுவ னங்களின் தலைவர் நவீன் மன்றாடியார் பெற்றுக் கொண்டார். இதில், புலவர் செந் தலை ந.கவுதமன், பேராசிரியர் சாரோன், சட் டக்கல்லூரி மாணவி ச.ஜென்னி, பெரியா ரின் பெண்கள் அமைப்பின் நிர்வாகி கனி மொழி உள்பட பலர் கலந்து கொண்டு உரை யாற்றினர். முன்னதாக கோவை நிகர் கலைக்  குழுவின் பறை இசையோடு நூற்றாண்டு விழா பேரணி காங்கயம் காவல் நிலையம் அருகில் தொடங்கி பேருந்து நிலையம் வழி யாக வந்து, விழா மண்டபத்தில் நிறைவு பெற்றது.

சாக்கடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கோரி வார்டு உறுப்பினர் தர்ணா

திருப்பூர், டிச.5- அவிநாசி அருகே செம்பியநல்லூர் ஊராட்சி தாசம்பாளையம் பகுதியில் சாக் கடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண  கோரி, பெண் வார்டு உறுப்பினர் குடும்பத்து டன் திங்கட்கிழமை தர்ணாவில் ஈடுபட்டார். அவிநாசி ஊராட்சி ஒன்றியம், செம்பிய நல்லூர் ஊராட்சிக்கு உட்பட 5 ஆவது வார்டு  தாசம்பாளையம் பகுதியில் முறையான சாக்கடை வசதி இல்லாததால், சாலையில்  கழிவுநீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற் பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை  ஊராட்சி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம டைந்த வார்டு உறுப்பினர் மலர்விழி தனது  குடும்பத்துடன் செம்பியநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் அமர்ந்து திங்கட்கி ழமை தர்ணாவில் ஈடுபட்டார். இதைத்தொ டர்ந்து, தாசம்பாளையம் பகுதி மக்களும் தர் ணாவில் பங்கேற்றனர். தகவலறிந்து சம்பவ  இடத்துக்கு வந்த அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயகுமார், போலீஸார் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட் டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப் போது, ஒரு வாரத்தில் முறையான சாக்க டைக் கால்வாய் அமைக்கப்படும் என உறு தியளித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம்  அமைத்துத் தர விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர், டிச.5- கழிவு நீரில் இறங்கி சென்று விவசாயம் செய்யும் அவலநிலை உள்ளது எனவே வெங் கலபாளையம் வயக்காட்டுப்புதூா் இடையே  நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் அமைத் துத் தர வேண்டும் என விவசாயிகள் ஆட்சி யரிடம் திங்கட்கிழமை மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ஊத்துக்குளி வட்டம் சர்க்கார் கத்தாங்கண்ணி, வெங்க லபாளையத்தில் காலம் காலமாக வசித்து  வருகிறோம். எங்கள் ஊர் நொய்யல் ஆற்றின்  வடக்கு கரையில் உள்ளது. எங்களுக்கு சொந் தமான விவசாய நிலங்கள் கத்தாங்கண்ணி வயக்காட்டுபுதூரில் நொய்யல் ஆற்றின் தெற்கு கரையில் உள்ளன. எங்களது விவ சாய நிலத்துக்கு நொய்யல் ஆற்றைக் கடந்து தான் சென்று வருகிறோம். எப்போதும் நொய் யல் ஆற்றில் கழிவுநீர் சென்று கொண்டுள் ளது. இதில் இறங்கி நாங்கள் விவசாய நிலத் துக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் தொற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த வழி இல்லை என்றால் நாங்கள் ஊத் துக்குளி- காங்கேயம் சாலையில் உள்ள பாலத்துக்கு வந்து வர வேண்டும். அல்லது ஒரத்துப்பாளையம் அணைக்கட்டைத் தாண்டி உள்ள பாலத்தின் வழியாக செல்ல  வேண்டும். இந்த இரண்டு வழிகளும் சுமார் 15  கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டும். எனவே வெங் கலபாளையம் வயக்காட்டுப்புதூர் இடையே  நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் அமைத் துத் தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது

சேலம், டிச.5- சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, 11 ஆம்  வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, பள்ளிக்கு சென்ற மாணவி, தனது ஆசிரியையிடம் புகார்  ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் தனது தந்தை, தனக்கு பாலியல் தொல்லை அளித்தாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, இதுகுறித்து சேலம்  டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் சம்பந்தப்பட்ட மாணவியிடம்  நேரடி விசாரணை நடத்தினார். இதையடுத்து மாணவி அளித்த  புகாரின்பேரில், அவருடைய தந்தை மீது போக்சோ சட் டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

பணமோசடி: பாதிக்கப்பட்ட பெண்கள் தர்ணா

சேலம், டிச.5- கடன் வாங்கி தருவதாக ஆவணங்களை பெற்று பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக் கப்பட்ட பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், மணியனூர் அருகே  உள்ள கோடாரங்காடு பகுதியில் வசித்து வரும் பெண்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பாரத் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் மூலம் வெங்கடாசலம், வள்ளி, ஜெயந்தி  ஆகியோர் ஏஜெண்டாக செயல்பட்டுள்ள னர். இவர்கள் நாங்கள் வசிக்கும் பெண்களி டம் கடன் வாங்கி தந்ததாகவும், அதன்பின்  அதிகக்கடன் பெற்று தருவதாக ஆவணங் களை பெற்று, பணத்தை மேற்கண்ட மூவரும் வாங்கிக்கொண்டு ஏமாற்றியுள்ளனர். தற் போது பைனான்ஸ் நிறுவனத்தில் தாங்கள் பணம் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.  கடன் வாங்காமலே நிதி நிறுவன ஊழியர்கள் கடனை கட்டுமாறு மிரட்டி வருகின்றனர். தங் களை ஏன் இப்படி செய்தீர்கள்? என கேட்ட தற்கு சம்பந்தப்பட்ட மூன்று பேரும் கொலை மிரட்டல் விடுகின்றனர். இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தும், இதுவரை எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பண மோசடி செய்த 3 பேர் மீதும், அடாவடியாக பணத்தை திரும்ப கட்ட சொல் லும் நிதி நிறுவன ஊழியர்கள் மீதும் நடவ டிக்கை எடுக்க வேண்டும், என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.