districts

img

அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க ரூ.80 கோடி ஒதுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலை, ஜூன் 25- தமிழக அரசு அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க ரூபாய் 80 கோடி நிதி ஒதுக்க வேண் டும் என செவ்வாயன்று சர்க்கரை ஆலை  வளாகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மடத்துக்குளம் தாலுகா கிருஷ்ணா புரத்தில் தமிழக அரசின் சார்பில் 1960  ஆம் ஆண்டு சுமார் 1250 டன் அரவை திறன் கொண்ட அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை துவங்கப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் நல்ல  லாபத்தில் இயங்கி வந்த ஆலை, கடந்த சில வருடங்களாக இயந்திரத்தில் புது மைகளை கொண்டு வரமால் பழைய  இயந்திரங்களை கொண்டு இயக்குவ தால் தொழிலாளர்களுக்கும் விவசாயி களுக்கும் பணம் தர முடியாத நிலையில்  உள்ளது. இதுகுறித்து  தமிழ்நாடு விவசாய  சங்கத்தின் தலைவர் பாலதண்டபாணி  கூறுகையில், ஆலையில் கடந்த 60  ஆண்டுகளாக இருக்கும் இயந்திரங் கள் நவீனப்படுத்தப்படாமல் உள்ளன. இதனால், கடந்த காலங்களில் அடிக் கடி இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது.   மேலும், ஆலையின் மொத்த பிழி திறன்  7.8 சதவீதமாக குறைந்தது. இந்த ஆலை யில் முன்பு 10 சதவீதம் பிழி திறன் இருந் தது. கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்பு களை சரி செய்யும் வகையில் உடனடி யாக ஆலையில் பராமரிப்பு பணிகளை  துவங்க தமிழக அரசு கூடுதல் நிதி  வழங்க வேண்டும். விவசாய வேலை களை துவங்க அமராவதி அணையில் இருந்து ஜூலை மாதம் தண்ணீர் திறக்க  வேண்டும். மேலும் கரும்பு விவசாயிக ளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை முதல் வாரத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கூட்டத் தில் முடிவு செய்யபட்டுள்ளது என தெரி வித்தார். முன்னதாக தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் தலைவர் பாலதண் டபாணி தலைமையில் நடைபெற்ற கூட் டத்தில், தமிழக அரசு அமராவதி கூட்டு றவு சர்க்கரை ஆலையை புனரமைக்க  ரூபாய் 80 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், சங்கத்தின் செயலாளர் எம்.எம்.வீரப்பன், கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண் டார்கள்.