உடுமலை, மார்ச் 4 - திருப்பூர், கரூர் மாவட்டங்களில் அமராவதி பாசனப் பகுதி விவசாயி கள் பயனடையும் வகையில், அமார வதி அணையை தூர்வார பொது பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை யில் அமராவதி அணை அமைந்துள் ளது. விவசாயிகளின் பாசனம், ஆயி ரக்கனக்கான கிராமங்களின் குடிநீர் தேவை ஆகியவற்றை பூர்த்தி செய் யும் முக்கிய அணையாக அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெருமள விற்கு வண்டல் படிந்த மண் மேடாக இருக்கிறது. இதனால் மழை காலங்களில் அதிமான நீர் தேக்க முடி யாமல், ஆற்று பகுதியில் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்படு கிறது. மழை காலங்களில் நீரை சேமிக்கும் வகையில் அமராவதி அணையை தூர்வார வேண்டும். மேலும் தூர்வரும் வண்டல் மண் களை இப்பகுதி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்க எடுக்கவேண்டும். தற்பொழுது அணையில் மொத்த கொள்ளவான 90 அடியில் 53 அடி மட்டுமே நீர் உள்ளது. மேலும் அணை யின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை யில்லாத காரணத்தால் நீர் வரத்து மிக வும் குறைவாக உள்ளது. இப்போது அணையின் நீர் வரத்து பகுதியில் இருந்து மண் எடுத்தால் அணை நீர் கொள்ளளவு அதிகமாகும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.