திருப்பூர் ஜூன் 5- திருப்பூரை அடுத்த பட்டம்பாளை யம், காட்டுப்பாளையம், பருத்திக் காட்டுப்பாளையம் சுற்றுப்புற பகுதி களில் பலத்த காற்றுடன் மழை பெய் தது. இதில் பட்டம்பாளையத்தில் ஒரு தென்னை மரம் முறிந்து விழுந்தது. ஒரு பனை மரம் வேரோடு சாய்ந்தது. இதுபோல் பருத்திக்காட்டுப்பாளை யம் பகுதியில் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதுபோல் சுற் றுப்புற பகுதிகளில் வாழை மரங்க ளும் சேதமானதாக அப்பகுதி விவசா யிகள் தெரிவித்தனர். சேவூர் அருகே பொங்கலூர் ஊராட்சியில் பகுதியில் சில நாட்க ளாக வெயில் வாட்டி வதைத்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந் தது. இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்கள் மழை அவ்வப்போது பெய் தது. இந்நிலையில் நேற்று முன்தி னம் மாலை திடீரென சூறாவளி காற்று டன் மழை பெய்தது. இதனால் பொங் கலூர் ஊராட்சி பகுதியில் உள்ள கிரா மங்களில் தோட்டங்களில் வாழை மரங்கள் குலை தள்ளி அறுவ டைக்கு தயாராக இருந்த நிலையில் 5000-க்கும் மேற்பட்ட வாழை மரங் கள் சேதமடைந்தது. மேலும் பொங்கலூர் புது காலனி யில் மின்கம்பம் ஒன்று சாய்ந்தது. மேலும் அரசு தொடக்கப்பள்ளியில் கட்டிடத்தின் மேற்கூரையில் 200 க்கும் மேற்பட்ட ஓடுகள் தூக்கி வீசப் பட்டன. இதைத்தொடர்ந்து வரு வாய்த்துறையினர் வாழை மரங் களை கணக்கெடுக்கும் பணியில் ஈடு பட்டனர். தற்போது சேதமடைந் துள்ள வாழை மரங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண் டும் என விவசாயிகள் தெரிவித் தனர்.