உடுமலை, ஜன.25 - அறுவடை காலத்தில் வியாபாரி களும், கால்நடை தீவன நிறுவனங்க ளும் சிண்டிகேட் அமைத்து மக்கா சோளத்தை செயற்கையாக விலை குறைப்பு செய்வதால் விவசாயிக ளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என புகார் எழுந்துள்ளது. உடுமலை, மடத்துக்குளம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. மக்காசோளம் பயிர் செய்யும்போது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயி ரம் வரை விலை இருந்தது. ஆனால் தற்போது அறுவடை காலத்தில் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2,200 முதல் ரூ.2.400 வரை மட்டுமே வியா பாரிகள் விலை நிர்ணயம் செய்துள் ளனர். ஒரு ஏக்கர் மக்காச்சோளம் பயிர் செய்ய விதை, உரம், பூச்சி மருந்து, அறுவடை என ரூ.20 ஆயி ரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்யப்படுகிறது. அதீத மழை மற்றும் காட்டு பன்றிகளால் சேதம் ஏற்பட்டதால் விளைச்சலும் குறைந் துள்ளது. இதனால் மக்காச்சோள தட் டுகளையும் விற்பனை செய்ய இய லாத நிலை உள்ளது. குறைவான விளைச்சல் உள்ள நிலையில் விலை குறைப்பு செய்வதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதிகளில் விவசாயிகள் ஆண்டு முழுவதும் மக்காசோளம் உற்பத்தி செய்வதால், கால்நடை கள் மற்றும் கோழித் தீவன நிறுவனங் கள் அதிக அளவில் உள்ளன. இந்த நிறுவனங்களுடன் வியாபாரிகளும் கூட்டு சேர்ந்து செயற்கையாக விலை குறைப்பு செய்கின்றனர். எனவே விவசாயிகளுக்கு போது மான விலை கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3.500 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசா யிகளின் எதிர்பார்க்கின்றனர்.