பள்ளிபாளையம், ஜன.6- ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் உள்ள கால்நடை களுக்கு கோமாரி நோய் தாக்கி வருவதால் விவ சாயிகள் கவலையடைந் துள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள சீராப் பள்ளி, நாமகிரிப்பேட்டை, மங்களபுரம்,மெட்டாலா, தண்ணீர் பந்தல் பாளையம் ஆர்.புதுப்பாளையம், கல்லங்குளம் உள் ளிட்ட பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கி வருகிறது. இப்பகுதி களைச் சேர்ந்த விவசாயிகள் சராசரியாக ஒன்று முதல் இரண்டு கறவை மாடுகளை வைத்துள்ளனர். இந்த கறவை மாடுகள் மூலம் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது நாட்டு மாடுகளை விட ஜெர்சி இன கறவை மாடு களை அதிகளவில் வளர்த்து வருகின்றனர். கடந்தாண்டு கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் பாதிப்பு இருந்த நிலையில், தடுப்பூசிகள் மூலம் நோய் கட்டுப்படுத்தப் பட்டது. இந்நிலையில், கடந்த சில தினங் களாக விவசாய தோட்டங்களில் வளர்க்கப் படும் கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. தொற்று நோய் வகையை சேர்ந்த கோமாரி ஒரு கால்நடைகளில் இருந்து பிற கால்நடை களுக்கு பரவுவதால், பால் உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் கறவை பசுமாடுகளை வளர்த்து வரும் விவசாயி கள் அச்சமடைந்துள்ளனர். வழக்கமாக ஆண்டுக்கு இரு முறை கோமாரி தடுப்பூசி போடப்படும் நிலையில், இந்தாண்டு தடுப்பூசி போடும் பணியை கால்நடைத்துறையினர் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ அரசும், கால்நடைத் துறையினரும் போர்க்கால அடிப்படையில், ஒவ்வொரு கிராமப் பகுதிகளிலும் முகா மிட்டு, கறவை மாடு உள்ளிட்ட கால்நடை களுக்கு தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். கோமாரி நோய் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் முன் முயற்சி எடுத்து கறவை மாடுகளை, கால்நடைகளை, நோயி லிருந்து பாதுகாத்து காப்பாற்ற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.