திருப்பூர், செப்.19 - திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தெரு நாய்கள் கடித்து 27 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. இத னால் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் விவசாயிகள் காங்கேயம் பஸ் நிலையம் முன்பாக இறந்த ஆடு களை போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். காங்கேயம் வட்டம், காங்கேயம் நக ராட்சிக்கு உட்பட்ட தொட்டியபட்டி அம ராங்காடு பவித்ரா ஆயில் மில் மோகன் குமார் (62) என்பவரின் தோட்டத்தில் பட்டி அமைத்து 70 செம்மறியாடுகள் வளர்த்து வருகிறார். இதில் குட்டிகள் உட்பட 27 செம்மறி ஆடுகளை புதன் கிழமை இரவு தெரு நாய்கள் கடித்துக் கொன்று விட்டன. சமீபத்தில் செம்மங்குடி பளையம் கிராமத்தில் இது போல் தெரு நாய்கள் கடித்து துரத்தியதில் கிணற்றில் விழுந்து ஏராளமான ஆடுகள் இறந்தன. இந்த சம்பவத்தின் சோகம் தணிவதற்குள் ள்ளாக மீண்டும் தொட்டியபட்டியில் 30 ஆடுகள் தெரு நாய்களால் கொல் லப்பட்டுள்ளன. காங்கேயம் மட்டு மல்லாது திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் கிராமப்புறங்களில் மிகப்பெரும் பிரச்சனையாக கால்நடை கள் கொல்லப்படுவது உருவெடுத்து வருகிறது. மேற்படி சம்பவம் தொடர்பாக காங் கேயம் வட்டாட்சியருக்கு தகவல் தெரி வித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர். எனவே வியாழக்கிழமை காலை 12 மணி அளவில் காங்கேயம் பஸ் நிலையம் ரவுண்டானாவில், தெரு நாய்களால் கொல்லப்பட்ட ஆடுகளை கொண்டு வந்து போட்டு போராட்டம் நடத்தினர். தெரு நாய்களால் கொல் லப்பட்ட ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தெரு நாய்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் கால்நடை இழப்புகளை தடுத்து நிறுத்த உறுதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காங்கயம் வட்டாட்சி யர் மயில்சாமி, நகராட்சி ஆணையா ளர் கனிராஜ் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில், காங்கயம் நகராட்சி மூலம் தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்க ளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய அறுவைக்கூடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேற்படி அறுவைக்கூடம் 15 தினங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு. தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய்க்கடி தடுப்பு ஊசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் நாய்கள் கடித்து இறந்த ஆடுக ளுக்கு நகராட்சி மூலம் இழப்பீடு வழங்க வழிவகை எதுவும் இல்லை என, நக ராட்சி ஆணையர் கு.கனிராஜ் எழுத்து மூலம் தெரிவித்தார். எனினும் சட்ட ரீதி யாக இழப்பீடு வழங்க அரசு நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி னர். மேலும் நாய்கள் கடித்து காயமடை ைந்த 10 ஆடுகளுக்கு காங்கயம் கால் நடை மருத்துவமனை மூலம் உடனடி யாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந் தப் போராட்டத்தின் காரணமாக காங்கே யம் பேருந்து நிலையப் பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.