districts

img

நியாயமான விலை கேட்டு தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

திருப்பூர், ஜூலை 26 - தென்னை விவசாயிக ளுக்கு நியாயமான விலை கிடைக்க தேங்காய்க்கு உரிய விலை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கட்சி சார்பற்ற விவசாயி கள் சங்கத்தினர் செவ்வா யன்று திருப்பூர் மாவட்ட ஆட் சியரகம் முன்பாக இப்போராட் டத்தை நடத்தினர். இதில் ஏர்முனை உழவர்  அமைப்பின்  நிர்வாகி என்.எஸ்.பி.வெற்றி தலைமை ஏற்றார். இதில் தென்னை விவசா யிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.  தேங்காய்க்கு நியாயமானவிலை கொடுக்க வேண்டும், நியாயவிலைக் கடைக ளில் பாமாயிலைக் கைவிட்டு தேங்காய் எண் ணெய் வழங்க வேண்டும் கள் இறக்க அனு மதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைக ளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.  போராட்டத்தில் விவசாயிகள் கொண்டு வந்தி ருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தேங்காய்களை உடைத்து தங்கள் கோரிக்கைகளை வலியு றுத்தினர்.