districts

img

வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

நாமக்கல், பிப்.1- நில அளவீடு செய்ததற்கான சான்றிதழ்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் விவ சாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன் றியம், கோக்கலை எளையம்பாளை யம் பகுதியில் கல்குவாரிகள் செயல் பட்டு வருகின்றன. சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வரும் கல்குவாரி களை கண்டித்து அப்பகுதி விவசாயி கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வீடுகளுக்கும், குவாரி களுக்கும் இடையேயான இடை வெளி குறித்தான அளவீடுகள் செய்து  தர வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து சில வாரங்களுக்கு முன்பு நில அள வீடு செய்யப்பட்டது. ஆனால், நீண்ட  நாட்கள் ஆகியும் அளவீடு செய்ததற் கான சான்றிதழ்கள் ஏதும் வழங்கா மல் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சான்றிதழ் பெறுவதற்காக 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர். மாலை 4 மணியாகியும் சான்றிதழ்கள் வழங்காததால் ஆவேசமடைந்த விவசாயிகள், போராட்டக்குழு தலை வர் பழனிவேல் மற்றும் சிபிஎம் ஒன் றிய கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட் டனர். இதனையடுத்து திருச்செங் கோடு நகர காவல் ஆய்வாளர் மகேந் திரன் தலைமையிலான போலீசார் மற்றும் திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் இமய வரம்பன் உள்ளிட்டோர் போராட்டக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத் தினர். இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அளவீடு விவ ரங்கள் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.