districts

img

விளை நிலங்களில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

சேலம், ஜன.10- அரசிராமணி பேரூராட்சியில் சேக ரமாகும் குப்பைகள் விளை நிலங்களில் கொட்டப்படுவதைக் கண்டித்து, விவசா யிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர் சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட பகு திகளில் சேகரமாகும் குப்பைகளை, குறுக்குப் பாறையனூரில் கொட்ட பேரூராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது. இம்முடிவு விவசாயத்தை முழுமை யாக பாதிக்கும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் விவசாயி ஒருவர் முறை யிட்டார். அப்போது உயர்நீதிமன்றம் விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, 12 வாரங்களுக்குள் பாதிக்கப் படும் விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண் டும், என உத்தரவிட்டது. ஆனால், சேலம் மாவட்ட ஆட்சியர் விவசாயிக ளின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வில்லை. மாறாக, விவசாயிகள் எதிர்க் கும் இடத்திலேயே குப்பைகளை கொட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து குப்பைகளை கொட்டும்  பணி துவங்கப்பட்டது. மேற்படி இடத் தில் குப்பைகளை கொட்டினால் விவ சாயம் கடுமையாக பாதிக்கும். அத னால் விவசாயம் பாதிக்காத வகை யில், குப்பைகளை கொட்டுவதற்கு மாற்று அரசு நிலங்கள் இருக்கிற போது, அங்கே கொட்டாமல் ஒருதலை பட்சமாக பேரூராட்சி நிர்வாகமும், மாவட்ட ஆட்சியரும் செயல்படுகின்ற னர். இதனைக் கண்டித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, விவசாயிகள் சங்க வட்டத்  தலைவர் ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணைச்செயலாளர் பி.பெருமாள், மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட துணைத்தலை வர் பி.தங்கவேலு, பால் உற்பத்தியாளர் கள் சங்க மாவட்டத் தலைவர் மணி, சங்க கிரி பேரூராட்சி கவுன்சிலர் மாணிக்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஆதித்தமிழர் கட்சி நிர்வாகி மாய வன், வழக்குரைஞர் ராமசாமி, விவசா யிகள் சங்க வட்ட நிர்வாகிகள் நல்லத் தம்பி, கனகராஜ், சுப்ரமணி, விவசாயத் தொழிலாளர் சங்க வட்ட துணைத்தலை வர் செந்தில், தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்ட துணைத்தலைவர் ஜெய லட்சுமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனிடையே, கோட்டாட்சியரிடம் மனு அளிக்க சென்றபோது, அவர் இல் லாததால் போராட்டம் தொடர்ந்தது. அப் போது, உதவியாளரிடம் மனு அளிக்க காவல் துறையினர் அறிவுறுத்தினர். ஆனால், கோட்டாட்சியரிடமே மனு அளிப்போம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.