districts

img

காண்டூர் கால்வாய் புதுப்பிக்கும் பணியில் வனத்துறை இடையூறு செய்வதால் தேவையற்ற காலதாமதம்: விவசாயிகள் குற்றச்சாட்டு

உடுமலை, ஜூன் 17- பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் நீர் கொண்டு வரக்கூடிய பிரதான ஆதாரமாக இருக்கும் காண்டூர் கால்வாய் புதுப்பிக்கும் பணி யில் வனத்துறை இடையூறு செய்வதால் தேவை யற்ற காலதாமதம் ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று பிஏபி பாசன விவசாயிகள் கூறி னர். பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் (பி.ஏ.பி) திருமூர்த்தி அணைக்கு மேற்குத் தொடர்ச்சி மலைக் குன்றுகளுக்கு இடையில் கட் டப்பட்டுள்ள ஆறு தொகுப்பு அணைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இவை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கடல் மட்டத்திலி ருந்து பல ஆயிரம் அடி உயரத்தில் உள்ளன. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 3.77 லட்சம் ஏக் கர் விவசாய விளைநிலம் பாசனம் பெறுவதற்கும், பல லட்சம் மக்களின் குடிநீர் தேவைக்கும் இந்த  தண்ணீரை மேற்கண்ட அணைகளில் இருந்து திரு மூர்த்தி அணைக்குக் கொண்டு வருவதற்கு ஒரே  ஆதாரமாக காண்டூர் கால்வாய் உள்ளது. மேற்படி கால்வாய் முற்றிலும் சிதிலமடைந்து உள்ளதால், பல கட்டங்களாக, பாசன காலங்களுக் கும் பாதிப்பு ஏற்படாமல் புதுப்பிக்கப்பட்டு வருகி றது. அதன் ஒரு பகுதியாக 33.4, 35, 37 ஆகிய  கிலோ மீட்டர்களில் சுமார் 750 மீட்டர் நீளத்திற்குப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதோடு திருமூர்த்தி அணையிலிருந்து 1.2 கி.மீ  வரை பரம்பிக்குளம் பிரதான கால்வாயும் (பிஎம்சி)  புதிய தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரு கிறது. மேற்படி பணிகளை பொதுப்பணித் துறை  அதிகாரிகள் தொடர்ந்து பார்வையிட்டு வருகி றார்கள். தென்மேற்குப் பருவமழையினால் தொகுப்பு  அணைகளுக்கு போதிய நீர் வரத்து இருக்கும் பட் சத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் மண்டல பாசனத் திற்கு தண்ணீர் திறக்க வேண்டும். எனவே, கூடுதல்  ஆட்களை வைத்து, பணி செய்யும் நேரத்தை அதிக ரித்தும் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண் டும். இதன் மூலம் தண்ணீர் திறப்பதற்கு ஏதுவாக  காண்டூர் மற்றும் பிரதான கால்வாய்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என பாசன சங்கங் கள், திட்டக்குழு மற்றும் ஆயக்கட்டு பாசன விவ சாயிகளின் சார்பாகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டக் குழுவின் சார்பாகவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் தற்போது நடைபெறும் பணி களை பாசன சங்கத் தலைவர்கள் ஏ.பாலதண்ட பாணி, மருள்பட்டி ஏ.சின்னச்சாமி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க திருப்பூர் மாவட்டத் துணைத் தலை வர் உடுக்கம்பாளையம் சு.பரமசிவம் ஆகியோர்  நேரில் சென்று பார்த்தனர்.இக்கட்டான நேரங்க ளில் காண்டூர் கால்வாயில் அத்தியாவசியமாக, அவசரமாகச் செய்ய வேண்டிய பணிகளுக்கும் கூட வனத்துறை பல்வேறு வகையில் முட்டுக் கட்டை போடுகிறது. கடந்த காலங்களிலும், தற் பொழுதும் பணிகளை மேற்கொள்வதில் இத னால் தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. 50  ஆண்டுகளுக்கும் முன்னர் கட்டி முடிக்கப்பட்ட காண்டூர் கால்வாய் தற்போது செயல்பாட்டில் உள் ளது. லட்சக்கணக்கான விவசாயிகளின் பாசனம் மற்றும் பல லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த காண்டூர் கால்வாய் பராம ரிப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள் ளும்பொழுது வனத்துறையினரால் இடையூறும், காலதாமதமும் ஏற்படுகிறது. கடந்த முறை சர்க்கார்பதி பகுதியில் மேக  வெடிப்பு ஏற்பட்டது போல், மிக அதிக கன மழை  பெய்ததனால் ஏற்பட்ட மலைச்சரிவில், ராட்சத  பாறைகள் உருண்டு வந்து காண்டூர் கால்வாயில் விழுந்து, முக்கால் கி.மீ. நீளத்திற்கு கால்வாயே மூடப்பட்டது. அப்பொழுது மலைவாழ் மக்கள்  குடியிருப்பும் பாதிக்கப்பட்டது. அங்கு மக்களின்  உயிரிழப்பும் ஏற்பட்டது. அந்த நேரத்தில்கூட  பொதுப்பணித் துறையினர் பாறைகளை அப்பு றப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு, வனத் துறை பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியது. எனவே, இனி வரும் காலங்களில் காண்டூர் கால் வாயில் பணிகளைச் செய்ய வனத்துறையினரால் இடையூறுகள் ஏற்படாமல் இருப்பதற்கு தமிழ்நாடு  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவ சாயிகள் கேட்டுக் கொண்டனர்.