districts

img

விவசாயிகள் தொழிலாளர்கள் கோரிக்கைகளுக்காக நடைபயணம்

உடுமலை, மார்ச் 5 - விவசாயிகள், தொழிலாளர்கள் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஏப்ரல் 5ஆம் தேதி தில்லியில் நடை பெறும் பேரணியை விளக்கி திருப்பூர் மாவட்டத்தில் நடை பயண பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம்  இணைந்து ஞாயிறன்று இந்த இயக் கத்தை நடத்தினர். சிஐடியு மாவட்டத்  துணைச் செயலாளர் எஸ்.ஜெகதீசன்  தலைமையில் தளி கருப்புசாமி  வரவேற்றார். தளி பேரூராட்சியில்  துவங்கிய நடைபயணத்தை சிஐடியு  மாவட்டக்குழு உறுப்பினர் வே.விஸ்வ நாதன் துவக்கி வைத்தார். விவசாய சங்க தலைவர் ஏ. ராஜகோபால், உடுமலை செயலாளர் ஏ. பாலதண்டபாணி, சிஐடியு உடுமலை தலைவர் வெ.ரங்கநாதன், எல்லம்மாள்,  உள்ளாட்சி சங்க ஈஸ்வரன், மின் ஊழியர்  அமைப்பு ஜெகானந்தா, விதொச உடு மலை செயலாளர் எம்.ரங்கராஜ்,  மாவட்ட செயலாளர் அ.பஞ்சலிங்கம், பி.எஸ்.சுந்தரம் உட்பட ஏராளமானோர் பங்கேற்று, முழக்கமிட்டு நடை பயணத்தில் பங்கேற்றனர்.  இந்த நடைபயணம் தளி, திணைக் குளம், ஜல்லிபட்டி நால்ரோடு, ஜல்லி பட்டி புதுக்காலனி, ஜல்லிபட்டி தெற்கு  வீதி, ஓணாக்கல்லூர், லைட் சிட்டி,  குறிச்சிக்கோட்டை, ஆலாம்பாளையம் பிரிவு, ஆலாம்பாளையம், கொங்கல குறிச்சி வழியாக பள்ளபாளையம் பகுதியில் நிறைவடைந்தது. இந்த நடை பயணத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் உடு மலை ஒன்றியச் செயலாளர் கி.கனக ராஜ் நிறைவு செய்து பேசினார். இறுதி யாக சுந்தரம் நன்றி கூறினார். முன்னதாக, ஆலாம்பாளையத்தில் கட்டுமான சங்க கொடியேற்றுவிழா நடைபெற்றது. 

பொங்கலூர் ஒன்றியம்

இதேபோல்,பொங்கலூர் ஒன்றியம், கொடுவாய் பேருந்து நிறுத் தத்திலிருந்து நடை பயண பிரச்சார  இயக்கம் தொடங்கியது. இந்த நடைபயண இயக்கத்திற்கு அ.இ.வி.தொ.ச. பொங்கலூர் ஒன்றிய தலைவர் சிவசாமி தலைமை வகித் தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார் துவக்கி  வைத்து உரையாற்றினார். சிஐடியு மாவட்ட பொருளாளர் ஜி. சம்பத், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆர். பாலன், அஇவிதொச ஒன்றிய செய லாளர் ஜி.சுந்தரம் ஆகியோர் கோரிக்கை விளக்கி உரையாற்றி னார்கள். கொடுவாயிலிருந்து பல்வேறு கிராமங்கள் வழியாக பொங்கலூரில் இந்த நடை பயணம் நிறைவடைந்தது. இதில், விவசாயிகள் விவசாயத் தொழி லாளர்கள் மற்றும் சிஐடியு சங்கத்தினர் கலந்து கொண்டனர். 

வெள்ளகோவில் ஒன்றியம்

திருப்பூர் மாவட்டம், வெள்ள கோவில் ஒன்றியம், முத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி தொட்டி பாளையம், ஸ்ரீ ராமமூர்த்தி நகர், முத்தம் பாளையம் வழியாக வெள்ளகோவில் பேருந்து நிலையம் வரை நடைபயணம்  நடைபெற்றது.  இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் காங்கேயம் தாலுகா குழுக்கள் சார்பில் இந்த இயக்கம் நடத்தப்பட்டது. விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏ.சண்முகம் இப்பிரச் சார பயணத்தை தொடங்கி வைத்தார்.  இதில் சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் எம்.கணேசன், மாவட்ட குழு உறுப்பினர் கே.திருவேங்கடசாமி, விவ சாய சங்க நிர்வாகி எஸ்.தங்கவேல், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி உள்ளிட் டோர் பங்கேற்றனர். வெள்ளகோவில் நகராட்சி 7வது வார்டு உறுப்பினர் ராதா மணி வாழ்த்திப் பேசினார். நிறை வாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  மாவட்ட செயலாளர் செ.மணிகண்டன் நிறைவு செய்து வைத்து பேசினார். இதில்  சி ஐ டி யு, விவசாயிகள் சங்கம் , விவசாய தொழிலாளர் சங்கத் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

மடத்துக்குளம்

இதேபோல்,திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, காரத் தொழுவு முதல் மடத்துக்குளம் வரை நடைபயணம் நடைபெற்றது. இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் மடத்துக்குளம் தாலுகா குழுக்கள் சார்பில் இந்த நடைபயண பிரச்சார இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன், மடத்துக்குளம் தாலுகா நிர் வாகிகள் பன்னீர்செல்வம், எம்.எம்.வீரப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.