தருமபுரி, அக்.15- ஒகேனக்கலுக்கு 8 ஆயிரம் கனஅடி அளவிற்கு தண்ணீர் வந்து கொண்டிருப் பதால், பரிசல் இயக்க 4 ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக வும், கர்நாடகா அணைகளில் திறக்கப் பட்ட தண்ணீராலும் தமிழக - கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழி யாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதி கரித்து வருகிறது. ஒகேனக்கல் காவிரி யில் வெள்ளியன்று காலை 9,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, சனியன்று காலை, 14 ஆயிரம் கன அடியாக அதிக ரித்தது. இந்நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகே னக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்து ஞாயி றன்று காலை நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இருந்தபோதி லும், அங்குள்ள மெயினருவி, ஐந்தருவி, ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண் ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுற் றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஒகேனக்கல்லில் பரிசல் சவாரிக்கு கடந்த அக்.12 ஆம் தேதியன்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில், ஞாயிறன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடி அளவில் தண்ணீர் குறைந்து வந்தபோதிலும், 4 ஆவது நாளாக பரி சல் இயக்க தடை நீடித்து மாவட்ட நிர்வா கம் உத்தரவிட்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லுக்கு ஞாயிறன்று ஏராளமான சுற்றுலா பயணி கள் வருகை தந்தனர். இதன்பின் சுற் றுலா பயணிகள் எண்ணை மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். ஆனால், பரிசல் இயக்க தடை நீடிக்கப்பட்டிருந்தால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.