நாமக்கல், டிச.23- பள்ளிபாளையம் அருகே பொங் கல் கரும்புகள் அறுவடைக்கு தயாரான நிலையில், அரசின் பொங் கல் பரிசுத் தொகுப்பில் கரும்பைச் சேர்த்து வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபா ளையம் அடுத்துள்ள சமய சங்கிலி, ஆவத்திபாளையம், களியனூர் உள் ளிட்ட பகுதிகளில் சுமார் 100 முதல் 200 ஏக்கர் வரை ஆண்டுதோறும் பொங் கல் கரும்புகள் பயிரிடப்பட்டு வருகி றது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத துவக்கத்திலேயே அறுவடை செய்யும் வகையில், பொங்கல் கரும் புகள் பயிரிடப்படும். காவிரி ஆற்றங் கரையோரம் நீர் வளம் மிகுந்த பகுதி என்பதால், இங்கு அதிகளவு பொங் கல் கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு 20 நாட் கள் உள்ள நிலையில், பொங்கல் கரும்புகளை அறுவடை செய்ய விவ சாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, சமய சங்கிலி கிராமத்தி லிருந்து சேலம் நாமக்கல், கரூர் மற் றும் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அதிகளவு கரும்புகள் ஏற்றுமதி செய்யப்படு கிறது. தற்போது பொங்கல் கரும் புகள் முழுமையான வளர்ச்சி அடைந் துள்ளதால், அதை அறுவடை செய் யும் காலமும் நெருங்கியுள்ளது. முதற்கட்டமாக வெளி மாவட்ட பகுதிகளிலிருந்து வருடந்தோறும் கரும்புகளை வாங்கி விற்பனை செய் யும் வியாபாரிகள் கரும்புகளை வாங்க, சமய சமயங்கிலி பகுதியில் வெளி மாவட்ட வியாபாரிகள் விவசா யிகளுடன் பேசி வருகின்றனர். கடந் தாண்டு தமிழக அரசால் குடும்ப அட்டைதாரருக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பொங் கல் கரும்பு இடம்பெறாத நிலையில், பெரும் போராட்டத்திற்கு பிறகு பல் வேறு அரசியல் கட்சிகளின் கோரிக் கைகளுக்குப் பிறகே பொங்கல் பரி சுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட் டது. அதேபோல இந்த ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசால் கரும்புகள் கொள்முதல் செய்யப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.