districts

குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா 200 ஏக்கரில் விரிவாக்கம்

சேலம், ஜூன் 9- ஏற்காடு அருகே உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா 200 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக சட்டமன்ற மதிப் பீட்டு குழு தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு வினர் கடந்த 2 நாட்களாக சேலத்தில் முகாமிட்டு ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இந்த குழுவின் தலைவரான டி.ஆர்.பி.ராஜா தலைமையில் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ண மூர்த்தி, அருள், அன்பழகன், ஈ.ஆர்.ஈஸ் வரன், எழிலரசன், பாலசுப்பிரமணியன், முக மது ஷாநவாஸ், செல்லூர் கே.ராஜூ, ராஜ் குமார் ஆகியோர் ஏற்காடு அடிவாரம் பகுதி யில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா வில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அக்குழு பூங்காவில் உள்ள வனவிலங்கு கள் குறித்தும், சுற்றுலா பயணிகளின் வரு கையை அதிகரிக்க மேற்கொள்ள வேண் டிய நடவடிக்கைகள் குறித்தும் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  இதனைத்தொடர்ந்து சட்டமன்ற மதிப் பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி.ராஜா தலை மையில் அரசு அலுவலர்களுடனான ஆய்வு  கூட்டம் நடைபெற்றது. இதில், கருங்காளி பழங்குடியினர் கிராமத்தில் ஆய்வு பணி யின் போது பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த 7 பேருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.  

இதையடுத்து சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர் களிடம் கூறுகையில், சேலம் மாவட்டத் தில் நடைபெற்று வரும் பணிகளின் தற்போ தைய நிலை குறித்து நேரில் ஆய்வு மேற் கொண்ட போது பாலப்பணிகளை விரைவு படுத்த வேண்டும். பழைய பேருந்து நிலை யம் மறுசீரமைக்கும் பணிகளை விரைந்து  முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிக ளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். குரும்பப் பட்டி வன உயிரியல் பூங்கா 31 ஏக்கரில் உள்ளது. இருந்தாலும் அது முழுமையான பூங்காவாக இல்லை. இந்த பூங்காவை மேம்படுத்த ரூ.8 கோடி நிதி கூடுதலாக கேட்கப்பட்டுள்ளது. அதற்கும் நிச்சயமாக பரிந்துரை செய்வதுடன், மேலும், தேவைப் பட்டாலும் நிதி ஒதுக்கி, சென்னை வண் டலூர் பூங்கா போன்று மாற்ற நடவடிக்கை  எடுக்கப்படும். இயற்கை சூழலில் அமைந் துள்ள இந்த பூங்காவிற்கு இன்னும் அதிக மான வனவிலங்குகளை கொண்டு வர வேண்டும். குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா வெகு விரைவில் 200 ஏக்கர் பரப்பள வில் விரிவாக்கம் செய்வதற்கான ஏற்பாடு களை அரசு செய்து வருகிறது என்றார். முன்னதாக, இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், மாநகராட்சி மேயர் ரவிச்சந்திரன், சட்டமன்ற உறுப்பி னர்கள் வக்கீல் ராஜேந்திரன், சதாசிவம், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், துணை செயலாளர் சிவகும ரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின்  சுனேஜா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச் சந்தர், உதவி ஆட்சியர் வீர் பிரதாப் சிங்,  மாவட்ட வன அலுவலர் கவுதம் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.