districts

img

சிறப்பு மலை ரயில் இயக்கம் – சுற்றுலா பயணிகள் உற்சாகம்

மேட்டுப்பாளையம், மே 22- கோடை விடுமுறையை முன் னிட்டு சிறப்பு மலை ரயில் இயக்கப் பட்டது.  மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகை வரை நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் தின சரி இயக்கப்பட்டு வருகிறது. மேட் டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்படும் மலைரயில் பகல் 12 மணியளவில் உதகை சென்றடையும். பின்னர் மீண்டும் உதகையில் இருந்து பகல் 2 மணி யளவில் புறப்பட்டு மாலை 5.40 மணியளவில் மேட்டுப்பாளையம் வந்தடையும். உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட் டுள்ள இம்மலை ரயிலில் பயணித் தபடி நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாட்டு  மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா  பயணிகள் வருகை தருவது வழக் கம். சுற்றுலா பயணிகளின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இம் மலை ரயில், கோடை விடுமுறை  காலங்களில் சுற்றுலா பயணிக ளால் நிரம்பி வழியும். மேட்டுப் பாளையத்தில் இருந்து தினசரி ஒருமுறை மட்டுமே மலை ரயில் இயக்கப்பட்டு வருவதால் கோடை விடுமுறைக்கு சுற்றுலா வரும் பலருக்கும் மலை ரயிலில்  பயணிக்க டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வார் கள்.  இதனை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கோடை கால சிறப்பு மலை ரயில் ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறையால் இயக்கப்பட்டு வரு கிறது. வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு என இரு நாட்கள் மட்டும் இயக்கப்படும் இந்த மலை ரயில்  இம்மாதம் 21 தேதி முதல் இயக்கப் படும் என ரயில்வே நிர்வாகம் ஏற்க னவே அறிவித்திருந்த நிலையில் சனிக்கிழமை முதல் கோடை கால சிறப்பு ரயில் தனது சேவையினை துவக்கியது. வழக்கமான மலை ரயில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10  மணிக்கு புறப்பட்டு சென்ற பின் னர், இந்த சிறப்பு மலை ரயில்  காலை 9.10 மணிக்கு மேட்டுப்பா ளையத்தில் இருந்து உதகை நோக்கி புறப்பட்டது. நான்கு பெட் டிகளுடன் இயக்கப்படும் இந்த சிறப்பு மலை ரயில் பிற்பகல் 2.25 மணிக்கு உதகை சென்றடையும். வழக்கமான மலை ரயிலில் டிக் கெட் கிடைக்காத சுற்றுலா பய ணிகள் இந்த சிறப்பு மலை ரயிலில் முன்பதிவு செய்து உற்சாகத்து டன் பயணம் மேற்கொண்டனர்.