சேலம், நவ. 27- தமிழ் மொழிக்கு பல முகம் உள்ளது. எல்லா முகமும் சேர்ந்த துதான் தமிழ் மொழி. பக்தி இலக்கியத்திற்கும் ஒரு இடமுண்டு என சேலம் புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் உரையாற்றினார். சேலத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் களில் ஒருவரும், எழுத்தாளருமான ச.தமிழ்ச்செல்வன் முதன்மை விருந்தினராக பங்கேற்று உரை யாற்றினார். இதில், சிறப்பு விருந்தி னராக கொளத்தூர் பா.வைர வேல், அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்யமூர்த்தி தலைமை தாங்கி னார். இதில், நாட்டுப்புறவியல் குறித்து எழுத்தாளர் ச. தமிழ்ச் செல்வன் பேசுகையில், வட்டார வழக்கு மொழியில் நாட்டுப் புறவியல் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. பண்டைய காலம் முதல் சொல வடை அதிகம் பேசப்பட்டு வந் ்துள்ளது.
சங்க இலக்கிய காலம் முதல் தற்போதைய காலம் வரை சொலவடை மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு இருந்துள்ளது. பேச்சு வழக்கில் இருக்கும் சொற் கள் கொச்சை சொற்கள் இல்லை. அது மக்கள் பேசும் மொழி. நீண்ட நெடிய அந்தஸ்தை பெற்றுள்ள தமிழ் மொழியை தமிழ கத்தில் பாதுகாக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. முக்கிய ஆறு மொழிகளில் நான்கு மொழிகள் எழுத்து வடிவம் பெறாத நிலையில் உள்ளது. அதிலும், சமஸ்கிருதம் மக்கள் அதிகம் பயன்படுத்தாத மொழியாக இருக்கிறது. தற்போது மொழியை வைத்து அரசியல் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ் மொழி இன்னும் தமிழக மக்கள் வழிபடும் கோவிலுக்கு உள்ளே செல்லவில்லை. தமிழ் மொழியை வளர்ப்பதாக கூறும் ஒன்றிய ஆட்சியாளர்கள், காசி வரை எடுத்து சென்றாலும் அந்த தகவலை தமிழக முதல்வருக்கு கூட தெரிவிக்க முடியாத நிலை தான் உள்ளது. தமிழை மொழி சார்ந்த அரசியலாக மாற்ற நினைக் கிறார்கள். பக்தி இலக்கியம் பண்டைய காலம் முதல் இருந்து வந்தது. சங்க இலக்கியத்தில் பக்தி இலக்கியத்திற்கு ஓர் இடம் இருந்தது. அதற்காக ஒட்டு மொத்த இலக்கியமும் பக்தி இலக்கியமும் அல்ல.
குஜராத் வில்லங்கங்கள்
சிலர் சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக கொண்டு வர வேண்டும் என விரும்புகின்றனர். குறிப்பாக குஜராத் மாநிலத்தில் வஞ்சிரா வழக்கு மிக முக்கியமான ஒன்று. சமஸ்கிருதம் தான் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கதை நடந் துள்ளது. வில்லங்கங்கள் அனைத் தும் குஜராத்தில் இருந்து தான் வரு கிறது. குஜராத் வஞ்சிரா வழக்கை விசாரித்த நீதிபதி, “வழக்கு தொடர்ந்த உங்களுக்கு சமஸ் கிருதம் தெரியுமா” என கேட்டார். அதற்கு வழக்கு தொடர்ந்தவர் தனக்கு சமஸ்கிருதம் தெரியாது என தெரிவித்த நிலையில், “வழக்கு தொடர்ந்த உங்களுக்கே சமஸ்கிருதம் தெரியாது என்றால் ஏன் சமஸ்கிருதம் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்” என நீதிபதி விமர்சனம் செய்த சூழலும் இந்தியா வில் அரங்கேறி உள்ளது. தமிழ் மொழி தென்னிந்தி யாவில் தனித்து பேசப்படும் மிக முக்கியத்துவம் வாய்ந்த மொழி யாக கருதப்படுகிறது. கால்டு வெல் சிறந்த புத்தகத்தை இயக்கி யுள்ளார். 75 தென்னிந்திய மொழி கள் தனித்த மொழிகள் ஐரோப்பிய மொழிகளுக்கு தொடர்பு உள்ளது எனவும்,
இலக்கணத்தை வைத்து அனைத்தும் கணிக்கப்படுவதாக தெரிவித்தார். நாம் திராவிட குடும் பத்தில் உள்ளோம். மொழியால் குடும்பமாக இருக்கிறோம், இனத் தால் அல்ல. டோனி ஜோசப் எழுதிய ஆதி இந்தியர்கள் புத்தகத்தில் இந்தியர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என தெரி விக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் இருள் போக புத்த கத்தை படித்தால் போதும். இருளும் ஓடிவிடும். அறிவின் வெளிச்சம் வகுப்பறையில் உரு வாகி வெளிச்சமாக மாற வேண்டும். கல்வியில் கேள்விகளோடு உள்ள கல்வி தேவை. தமிழகத்தில் தற் போது கல்வியில் பெரிய அளவில் மாற்றம் நடைபெற்று வருவது மகிழ்ச்சியை தருகிறது. மக்கள் பேசும் பேச்சு வழக்குகளை ஏளனப்படுத்தக் கூடாது. தமிழ் தாய்க்கு பலமுகம் உள்ளது. எல்லா முகமும் சேர்ந்ததுதான் தமிழ் மொழி. பேச்சுத் தமிழ் கொண்டாடப்பட வேண்டும். எழுத் தாளர்கள் எழுத்தை பாதுகாக் கின்றனர். புரட்சி என்ற சொல்லை உருவாக்கியவர் பாரதி. அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி யின் பெயரை பாரத ஜன சபை என எழுதியவர் பாரதி. மொழியை மத அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது. பக்தி இலக்கியத்தை மட்டும் வைத்து தமிழ் மொழி வளரவில்லை. தமிழ் மொழி பல முகங்களை கொண்டு செம்மொழி யாக வளர்ந்து உள்ளது. தமிழை பாதுகாப்போம். அதோடு நாட்டுப் புற இலக்கியத்தை வளர வைத்து தமிழ் மொழிக்கு வளம் சேர்ப்போம் என்றார்.