திருப்பூர், டிச. 12- திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகு தியில் கடந்த வாரம் தொழிலதிபர் ஒருவ ரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு தமிழக முதல மைச்சர் வருகை தருகிறார் என்று அறிவிப்பு வந்தவுடன், இந்த சாலைகளில் உள்ள வேகத் தடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட் டது. முதலமைச்சர் வந்து சென்று ஒரு வாரம் கடந்த நிலையில் இன்னும் இந்த வேகத்தடை கள் போடப்படாமல் உள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதா வது, திருப்பூர், ஈரோடு, கோபி, கோவை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கடந்து செல்லும் முக்கிய சந்திப்பு பெருமா நல்லூர். ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்குட் பட்ட முட்டியங்கினர் பகுதியில் உள்ள இந்த பாலம் மிகவும் குறுகலான பாலம் என்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதும் உண்டு. எனவே பலமுறை நெடுஞ்சாலைத்துறையின ரிடம் முறையிட்டு இங்கு வேகத்தடை அமைத் தோம். இந்நிலையில் கடந்த வாரம் முதல மைச்சர் வருகிறார் என்று இந்த வேகத்தடை களை எல்லாம் அப்புறப்படுத்தினார்கள். முதல மைச்சர் வந்து சென்று ஒரு வார காலம் கடந் தும் இன்னும் இந்தப் பாலம் உட்பட பல இடங் களில் வேகத்தடைகளை அமைக்காமல் உள் ளார்கள். இதனால் விபத்துகள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். எனவே உடனே அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற் கொண்டு இந்த வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.