districts

img

உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்து ஒன்றிய அரசை கண்டித்து இபிஎப் பென்சனர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

உதகை, பிப்.2- இபிஎப் பென்சன் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப் படுத்தாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து குன்னூரில் இபிஎப் 95  பென்சனர்கள் நலச்சங்கத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து இபிஎப் பென்சனர்க ளுக்கும் குறைந்தபட்ச பென்சனாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பறிக் கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில்  கட்டண சலுகையை மீண்டும் வழங்க  வேண்டும். இபிஎப் 95 பென்சனர்க ளுக்கு ஆர்.சி.குப்தா வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை உடனடியாக ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை கொண்டு  வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது. இபிஎப் பென்சனர்கள் நல சங்கத் தின் சார்பில் குன்னூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.ராஜேந்திரன் தலைமை ஏற்றார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் தலைவர்கள் சந்தி ரன், எல்.சங்கரலிங்கம் உள்ளிட்டோர் உரையாற்றினர். இப்போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று, கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.