பொள்ளாச்சி, ஜன.28- அனைத்து கட்சி கூட்டியக்கத்தின் தொடர் போராட்டத் தின் விளைவாக பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் கட்டணக் கொள் ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பொள்ளாச்சி நகர மத்திய பேருந்து நிலையம் பின்புற முள்ள நகராட்சியில் இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில், நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக் கப்பட்டு வந்தது. அதாவது நாளொன்றிற்கு நகராட்சி விதித்த வாடகை ரூ.8க்கு பதிலாக ரூ.20 தொகையினை வசூலித்து வந்துள்ளனர். இதற்கு அனைத்துக் கட்சி கூட்டைமைப்பினர் கண்டனம் தெரிவித்து, பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தனர். இந்நிலையில், குடியரசு தினமான புதனன்று பொள் ளாச்சி நகராட்சி ஆணையாளரின் உத்தரவின்படி பொள் ளாச்சி பழைய பேருந்து நிலையத்தின் பின்பு அமைந் துள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்திற்கு ஒரு நாள் கட்டணமாக ரூ.8 வசூலிக்கப்படுமென நகராட்சி சார்பில் பதாகை ஒட்டப்பட்டது. மேலும், ரசீதும் வாடிக்கையாளர் களுக்கு வழங்கப்பட்டது.