நாமக்கல், மார்ச் 29- நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட சமூக நலத் துறை இணைந்து திருநங்கை களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி குறித்த சிறப்பு முகாம் புதனன்று (இனறு) நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 11 மணி முதல் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு முகாமில், படித்து முடித்து இவ்வலுவ லகத்தில் வேலைவாய்ப்புக் காக பதிவு செய்துள்ள அனைத்து திருநங்கைகளும் தங்களது வேலைவாய்ப்பு அட்டையுடன் மற்றும் இந் நாள் வரை பதிவு மேற் கொள்ளாத திருநங்கைகள் வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு மேற்கொள்ள ஏது வாக தங்களுடைய திரு நங்கை அடையாள அட்டை அசல், அனைத்துக் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல் களுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்று டன் வருகை புரியுமாறும், மேலும் தனியார் துறையில் பணி நியமனம் பெற விரும் பும் திருநங்கைகள் சுய விவ ரக் குறிப்பு மற்றும் கல்விச் சான்று நகல்களுடன் இம் முகாமில் கலந்து கொள்ள லாம். மேலும் இம்முகாமில் போட்டித் தேர்விற்கான இல வச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் எனவும், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடைமுறை விதி களான முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 04286-222260 என்ற அலுவலக எண்ணை தொடர்பு கொள்ள லாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது.