districts

img

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த வலியுறுத்தல்

தருமபுரி, ஜன.5- ஏரிகளில் குப்பை கொட்டுவதை கைவிட்டு முறையாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்ப டுத்த வேண்டும் என குறைதீர் கூட்டத் தில் விவசாயிகள் தெரிவித்துள்ள னர். தருமபுரி வருவாய் கோட்டத்திற் குபட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தருமபுரி வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட் சியர் கீதாராணி தலைமையில் வெள் ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில் மண்டல துணை வட்டாட்சியர் கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள், வேளாண்மைத்துறை அலுவ லர்கள், வனத்துறை, மின்சார வாரி யம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங் கேற்றனர். அப்போது விவசாயிகள் பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில்  வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழை பொய்த்து விட்டது. இதனால்  வறட்சி நிலவுகிறது. இதனால் பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு நிவார ணம் வழங்க வருவாய்த்துறையினர் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். 100  சதவிகித மானியத்தில் வழங்கப் பட்ட சொட்டுநீர் பாசன குழாய்கள் ஓராண்டுக்குள் பழுதடைந்துவிட் டது. சொட்டுநீர் பாசன குழாய்களை தரமானதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவ தும் உள்ள ஊராட்சிகளில் குப்பை களை பிரிக்க திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகி றது. திடக்கழிவு மேலாண்மை திட்டத் தில் குப்பையை பிரித்து இயற்கை  உரமாக்க வேண்டும். இத்திட்டத்தை  பல்வேறு ஊராட்சிகளில் செயல்ப டுத்தாமல் குப்பையை நேரடியாக ஏரி களில் கொட்டும் நிலமை உள்ளது. இதனால் நீர்மாசுபட்டு விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே, ஏரிக ளில் குப்பை கொட்டுவதை கைவிட்டு முறையாக திடக்கழிவு மேலாண்மை  திட்டத்தை செயல்படுத்த வேண் டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் கட் டப்படும் கழிப்பறைகள், அரசு பள்ளி கட்டடங்கள் திறக்கப்படாமல் உள் ளன. இதனை மக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும். கேஆர்பி அணை கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும். பைசு அள்ளி கிராமத்திற்கு காலை, மாலை நேரங்களில் அரசு பேருந்து இயக்க வேண்டும், என்றனர். இதற்கு பதில ளித்து பேசிய வருவாய் கோட்டாட்சி யர் கீதாராணி, மேற்கண்ட பிரச்சனை களை ஆய்வுசெய்து உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.