தருமபுரி, மார்ச் 12- 56 ஆயிரம் காலிப்பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண்டும் என மின்வாரிய தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனை கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் சம்மேளன திட்ட செயலாளர் தேவராஜன் தலை மையில் நடைபெற்றது. இதில், சிஐ டியு மாநில துணைத்தலைவர் பி. ஜீவா, திட்ட செயலாளர் தீ.லெனின் மகேந்திரன், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் சாந்தமூர்த்தி, ஏயூஎஸ்யு மண்டல செயலாளர் திரு மால், அம்பேத்கர் சங்க திட்ட செய லாளர் மாதேசன், பொறியாளர் சங்க திட்ட செயலாளர் முரளி, என்எல்ஒ திட்ட செயலாளர் தர்மலிங்கம், தமிழ் நாடு எலக்ட்ரிக் சிட்டிபோர்டு எம்ளா யூஸ் பெடரேசன் திட்ட செயலாளர் கோகுல்தாஸ், ஏஐசிசிடியு திட்ட தலைவர் திருமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், 22.2.2018 ஆம் ஆண்டில் ஏற்பட்ட முத்தரப்பு ஒப் பந்தத்தின் அடிப்படையில் பதவி களை நிரப்ப வேண்டும். 56 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண் டும். நிரந்தர தன்மை வாய்ந்த பதவி களை அவுட்சோர்சிங் முறைக்கு விடக் கூடாது. அரசாணை 100ன் அடிப்படை யில் பணியாளர்கள் ஏற்றுக் கொள்ளு கின்ற வகையில் அரசு உத்தரவாதத் துடன் கூடிய, முத்தரப்பு ஒப்பந் தத்தை ஏற்படுத்த வேண்டும். 01.12.2019 ஆம் ஆண்டு முதல் மின் வாரிய பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை வழங்க வேண்டும். மின்வாரிய பணியாளர்க ளுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தரும புரி மாவட்டத்தில் அனைத்து மின் வாரிய அலுவலகம் முன்பும் பிரச்சா ரம் கூட்டம் நடத்துவது, மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28 ஆம் தேதியன்று சென்னை மின்வாரிய தலைமையகத்திலி ருந்து கோட்டையை நோக்கி பேரணி யாக சென்று மனு அளிக்கும் இயக் கத்தில், தருமபுரி மாவட்டத்திலி ருந்து பெருந்திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.