districts

img

காலமுறை ஊதியம்: சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல்

தருமபுரி, நவ.7- வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என சத்து ணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள் ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங் கத்தின் தருமபுரி ஒன்றிய பேரவை கூட் டம், சோகத்தூர் அருகே உள்ள ஆர்டி நக ரில் நடைபெற்றது. ஒன்றியத் துணைத் தலைவர் எம்.ஜெயந்தி தலைமை வகித் தார். பி.ஜான்சி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். ஒன்றியத் துணைத்தலை வர் பி.வளர்மதி வரவேற்றார். மாநிலச் செயலாளர் பி.மகேஸ்வரி துவக்க உரை யாற்றினார். ஒன்றியச் செயலாளர் எஸ். ரீனா, பொருளாளர் பி.மாதம்மாள் ஆகி யோர் அறிக்கைகளை முன்வைத்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச்  செயலாளர் ஏ.சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் முருகன், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி, சத்து ணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் கே.தேவகி, மாவட்ட துணைத்தலை வர் எம்.ராமன், மாவட்டப் பொருளாளர் பி.வளர்மதி வாழ்த்துரையாற்றினர். இக்கூட்டத்தில், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை தனியா ருக்கு கொடுப்பதை நிறுத்திவிட்டு, அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுப டுத்தி சத்துணவு மைய ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சத்துணவு ஊழி யர்களை முழு நேர அரசு ஊழியராக்கி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத் துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்ச மும், சமையலர் மற்றும் சமையல் உதவி யாளருக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண் டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழிய ருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ஊதிய மாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் தரும புரி ஒன்றியத் தலைவராக எம்.ஜெயந்தி,  செயலாளராக பராசக்தி, பொருளாள ராக டி.ஜெயந்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினராக பி.ஜான்சிராணி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட் டத் தலைவர் சி.காவேரி நிறைவுரை யாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் டி.ஜெயந்தி நன்றி கூறினார்.