districts

img

பெண்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்கிடுக

சேலம், மார்ச் 12- பெண்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்கிட வேண்டுமென சேலத்தில் நடை பெற்ற சர்வதேச பெண்கள் தின  கருத்தரங்கில் வலியுறுத்தப்பட் டது.  பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின திறந்தவெளி கருத்தரங்கம் சேலம் மெய்னூர் மெயின் ரோடு பகுதியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு உழைக் கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் ஆர். வைரமணி தலைமை வகித்தார். மாதர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் ஐ.ஞான சௌந்தரி வரவேற்புரையாற்றி னார். சிஐடியு மாநில உதவி தலை வர் ஆர். சிங்காரவேலு, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் மாநிலக்குழு உறுப்பினர் பவித்ரா, ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சி திட்ட அங்கன் வாடி சங்கத்தின் மாவட்ட பொரு ளாளர் மனோன்மணி, மாநில துணைத்தலைவர் எம். சரோஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.   இதில்,  பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்.

பெண் களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு கூடுதல் நிதி வழங்கி 200 நாட்கள் வேலை கிடைப்பதை உத்தரவாதம் செய்வதோடு, 600 ரூபாய் தினக்கூலி வழங்க வேண்டும்.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், சமையல் எரி வாயு மற்றும் இதர பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். பெண்க ளுக்கு மகப்பேறு விடுப்பு மற் றும் சலுகைகளை உறுதி செய்ய வேண்டும்.  அனைத்து பணியிடங் களிலும் போக்சோ சட்டத்தை கடு மையாக அமல்படுத்த வேண்டும் பெண்கள் குழந்தைகளுக்கு எதி ரான வன்முறைகளைத் தடுத்து நீதிபதி வர்மா கமிட்டியின் பரிந்து ரைகளை நிறைவேற்ற வேண்டும் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து அமைப்புகளிலும் 33 சதவீதம்  இட ஒதுக்கீட்டை விரைவில் அம லாக சட்டம் இயற்ற வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கை கள் முன்வைக்கப்பட்டன. முன்னதாக, இந்நிகழ்ச்சியில் சிஐடியு சாலைப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மாநில துணை தலைவர் எஸ். கே. தியாகராஜன் மாவட்ட செயலாளர் டி.உதய குமார், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.கோவிந்தன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.